(Я. tuгү. Ꭵ79 ° இளமையும் கல்வியும் திரு. விஜயரங்கம் தம் தொடக்கக் கல்வியினைப் பிரெஞ்சுமொழிப் பள்ளியிலும், உயர் கல்வியினைக் கல்வே கல்லூரியிலும், தமிழ்ப் புலவர் கல்வியினைக் காந்தைத் தமிழ்ச் சங்கப் புலவர் கல்லூரியிலும் கற்றார். ஆயினும் புலவர் இடைநிலை வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே அதாவது-1945ஆம் ஆண்டில்" கல்லூரி விடுமுறையின்போது சென்னைக்கு வந்த திரு. விஜயரங்கம், சென்னையிலேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார். எனவே அவரின் படிப்பு முற்றுப்பெறவில்லை. இதற்கு அவர் கூறிய காரணங்கள் இரண்டாகும். ஒன்று : தமிழ்ப்புலவர் பாடத் திட்டத்தில் வேண்டாத விரும்பத்த காத அலுப்பூட்டும் பாடப் பகுதிகள் இருந்து அவருக்குச் சோர்வூட்டியமை. இரண்டு சென்னையின் அன்றாட அரசியல், மற்ற ஆரவார நிகழ்ச்சிகளில் அவர்தம் இளம் மனத்தில் ஏற்பட்டவேட்கை. கவிதை உள்ளமும் பற்றும் பள்ளிக்குத் துள்ளிச் செல்லும் பிள்ளைப் பருவத் நிலேயே இவர் பாடல்கள் புனைவதில் அளவுகடந்த ஆர்வம் காட்டினார். வைகறையில் துயிலெழுந்து, தம் தோட்டத்திலுள்ள நாவல் மரத்தின்மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, கதிரவனைப் பார்த்துக் கவி புனைவதில் ஈடுபட்டு விடுவார். இரவிலும் பிறர் தூக்கத்திற்கு இடையூறாக இருந்தாலும் இவர் எழுத்துப்பணி தொடர்ந்தது. திரு விஜயரங்கம் புதுவையில் கல்வே கல்லூரியில் பயின்றுவந்த பொழுது பாரதியார் அங்கு வாழ்ந்த வரலாற்றை விருப்புடன் கேட்டறிந்தார். அவர் கவிதைகளில் பெரிதும் ஈடுபாடு காட்டினர். அது பொது கல்வே கல்லூரியில் ஆசிரியத் தொழில் நடாத்தில்
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/179
Appearance