பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.arp. 219 கதிர்மணியார் வீட்டிற் கண்டோம்" என்று சொல்லும் அளவிற்கு அவர் குணநலம் கொண்டவராக விளங்கினார். அவர் தம் இனிய பண்புகளைக் கவியரசு உரைக்கும் பாங்கினைக் காண்போம், கொண்டான்றன் குறிப்புணர்ந்து நடக்தொழுகுங் குலமகளாய்க் கூடி வந்து கண்டாரை விருந்தோம்பிக் காக்கின்ற கலைமகளாய் எவரை வீட்டிற் கண்டாலும் பணிந்துரைத்துக் கனிந்தமொழி தருமகளாய் எளிமை பூண்டு கண்டாரும் தொழத்தக்க திருமகளாய்க் கற்பரசி வாழ்ந்து வந்தார் (13) 5. நெறியுணர் காதை கதிரேசனார் தம் காலைக் கடமைகளைக் கவியரசு முடியரசனார் கிளத்தும் பாங்கில் அவர் தம் வாழ்வின் ஏற்றமும் விளக்கமும் தெரிய வருகின்றன போராடிச் செங்கதிரோன் தோன்று முன்னர்ப் புலர்காலைப் பொழுதத்துக் கடமை யாற்றி நீராடி வெள்ளியமெல் லாடை பூண்டு நீருடி மலரடியை நினைந்து, நெற்றி நீராடி மெய்யெல்லாம் பொலிந்தி ருக்க, நிறைமொழிகள் சிலசொல்லி வணங்கிப் பின்னர் யாரோடும் உரையாடல் முதலாம் செய்கை யாவையுமே செய்துவரல் அவர்வ ழக்கம் (1) காலையில் தேவாரம் ஒதுவார்: நாவாரப் பாடுவார். திருவாசகத்தில் தோய்வார். இதனை நயம்படக் கிளத்தும் сигтL-óð வருமாறு: