பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i HH** 263 இவர் இங்கிலாந்தில் தங்கியிருந்தபொழுது இந்திய தக்கள் மேம்பாட்டிற்காகப் பாடுபட்டார். 1833-ல் பிரிஸ்டல் நகரத்தில் இவர் நோய்வாய்ப்பட்டார். ஆங்கில நண்பர்கள் உடனிருந்து இவரை நன்கு கவனித்தும் பயனில்லாமல் அதே ஆண்டில் செப்டம்பர் 11 ஆம் நாள் உயிர் துறந்தார். ஒன்பது ஆண்டுகள் அழித்து இவர் தம் அருமைத் தோழர் துவாரகாநாத் தாகூர் இவர் கல்லறைமீது அழகான ஒரு நினைவுச் சின்னத்தை நாட்டினார். சமய, சமூகச் சீர்திருத்தம், பிரம்ம சமாஜத் தோற்றம், சதி ஒழிப்பு என்னும்பொழுது இராஜாராம் மோகன்ராப் அவர்களின் திருப்பெயரும் கட்டாயம் நினைவுக்கு வரும்.