பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை நாடு நலம்பெறத் தாம் வாழ்ந்த விழுமியஎடுத்துக்காட்டான வாழ்வால் தொண்டாற்றிய துரயோர் பலராவர். தமிழ்மொழி வாழவும், தமிழினம் செழிக்கவும், தமிழ்நாடு தழைக்கவும் பாடுபட்ட பெருந்தகையினர் பலராவர். அன்னா ருடைய பீடுநிறைந்த பெருவாழ்வினையும், இலக் கியத் தொண்டினையும் அறிந்துகொள்வதனால் தமிழர்க்கு நலம் விளைதல் உறுதி. கொள்கைப் பற்றும், தொண்டுள்ளமும், பண்பாடு போற்றும் வாழ்வும் கொண்டு இலக்கியம் தழைக்க இனிய வாழ்வினை மேற்கொண்ட இலக்கிய ஏந்தல்கள் சிலரின் பீடுசான்ற பெருவாழ்வினை உற்று நோக்கித் தமிழர் பெறவேண்டிய உணர்வுகள் பல. எனவே தமிழர் வாழ்வு தழைத்திடத் தன்னிகரற்ற தொண்டு ஆற்றிய துரயோர் சிலரின்-இலக்கிய. ஏந்தல்கள் சிலரின் வாழ்க்கையினையும், தொண்டினையும் காணும் போக்கில் இந்நூல் அமைந்துள்ளது. நன்றியுள்ள தமிழினம் இலக்கிய ஏந்தல்கள் சிலரைப் பற்றி இந்நூலால் அறிந்து பயன் கொள்வதாகுக. பா. சி,