பக்கம்:இலக்கிய தீபம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரண்டாம் பதிப்பின் முன்னுரை முதற் பதிப்பின் பிரதிகள் முற்றும் தீர்ந்துவிட்டன. இந்நூலை விரும்பிக் கற்போர் தொகையும் நாளடைவில் பெருகி வந்துளது. பலரும் ஆவலாய் இந்நூல் வேண்டு மெனக் கேட்கின்றனர். ஆதலால் இரண்டாம் பதிப்பு இப் பொழுது வெளிவருகிறது. இப்பதிப்பு, பல இடங்களில் திருத்தம் எய்தியுள்ளது. ஆதலால் இதிற் கூறிய துணிபுகளை எனது முடிவான கருத்து என்று கொள்ளுதல் வேண்டும். சில பல கூற்றுக் கள் கூறியது கூறலாகக் காணப்படும். இந்நூலகத்துள்ள கட்டுரைகள் வெவ்வேறு காலத்து எழுதியன. வெவ்வேறு நோக்கம் பற்றியும் இவை தோன்றின. எடுத்துக்கொண்ட ஒவ்வொரு விஷயமும் பூர்த்தியாவதற்கு இக் கூற்றுக்கள் இன்றியமையாதன. எனவே இவற்றை நீக்காதபடி வைத் துள்ளேன். இப்பதிப்பை வெளியிடுவதற்கு முன் வந்துள்ள பாரி நிலையத்தாருக்கு எனது நன்றி. தமிழ் நூல்கள் வெளியிடு வதில் புகழ் பெற்றவர்கள் சாது அச்சுக்கூடத்தினர். மிகவும் சிரத்தை எடுத்து அழகாக இந் நூலை அச்சு இயற்றிய அவர்களுக்கும் எனது நன்றி. சென்னை , 15-5-1955) - எஸ். வையாபுரிப் பிள்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/8&oldid=1453047" இலிருந்து மீள்விக்கப்பட்டது