பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v

      நூலைப் பற்றி

இலக்கிய மலர்கள் என்னும் இந்நூல் ஓர் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பு ஆகும். எனது தமிழ் இலக்கியச் சிந்தனைக் கோவையே இக்கட்டுரைத்தொகுப்பு. இத்தொகுப்பில் காணும் கட்டுரைகள் தமிழன் இளந்தமிழன், செந்தமிழ், நெல்லைச் செய்தி முதலிய இதழ்களில் ஏற்கெனவே வெளிவந்தவை. அவற்றை அவ்விதழ்களில் வெளியிட்ட ஆசிரியர்களுக்கு இதுகால் எனது நன்றியினை நான் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் இலக்கியப் பூஞ்சோலையில் எனது மலர்களும் நறுமணம் வீசித்திகழும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. தமிழ் மக்கள் இம்மலர்களின் மணத்தை நுகர்ந்து மகிழ வேண்டுகின்றேன். தமிழ் புரக்கும் நமது தன்னேரில்லாத் தலைவர், தமிழ கவள், மாண்புமிகு தமிழக முதல்வர், டாக்டர் கலைஞர்

திரு.மு. கருணாநிதி அவர்களது தலைசிறந்த தமிழ் மொழி, இலக்கியப் பணிகளைப் பாராட்டும் வகையில் இவ்விலக்கிய மலர்களை அவர்களுக்குச் சூட்டுகின்றேன்.

இந்நூலைப் பற்றி நான்கு அறிஞர்கள் தங்களது கருத்து மணிகளைத் தந்துள்ளனர். முதல்வர் வணக்கத்திற்குரிய எனது பேராசிரியர் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், பேராசிரியர் திரு அன்பழகன் ஆவார்கள். இரண்டாமவர் கல்விப் பேரறிஞர், மதுரத் தமிழ் வளர்க்கும் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு சை. வே. சிட்டிபாபு ஆவார்கள். மூன்றாமவர் எனது மதிப்பிற்குரிய அண்ணன், பேராசிரியர் திரு. ம. ரா. போ. குருசாமி ஆவார்கள். அடுத்தவர் எனது அன்பிற்குரிய தம்பி, பேராசிரியர்