பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

ஒருமைப்பாடுடைமையால், அப் புராணங்களை பாடிய புலவர்கள் அனைவரும், பாடற்பொருளில் கருத்தினைச் செலுத்தாது. பாடிய பாக்களில் தம் கற்பனைத்திறங் களைக் காட்டிச் சென்றனர். அதனால், அக்காலத்தே - பாடப்பெற்ற புராண இலக்கியங்கள் எல்லாம், பல்வேறு சுவை பயக்கும் பண்பு வாய்க்கப் பெற்றுள்ளன. புலவர் சிலர், இவ்வாறு தல புராணங்கள் பாடித் - தமிழிலக்கியத்தை வளர்க்க, வேறு சிலர், அக்கால - மக்கள், பலகாலும் கேட்டு மகிழ்ந்த அரிச்சந்திரன் கதை, தமயந்தி கதை, பாண்டவர். கதை முதலான வட நாட்டுக் கதைகளைத் தம் பாடற் பொருளாகக் கொண்டு இலக்கி --பங்கள் இயற்றினர் ; அரிச்சந்திர புராணம், வில்லி உரத்தூரார் பாரதம் போலும் இலக்கியங்களும், இவையும் கூறும் பொருளால் வேறுபாடுடைய வேனும், கற்பனை, சொல்லாட்சி, அணி ஆகிய இவற்றில் ஒத்த இயல் புடையவே. | புராணம் பாடிய புலவர்கள், - அகத்திணை, புறத் திணை தழுவிய பழந்தமிழ்ப் பாடல்கள் பால் மக்கள் கொண்ட பற்று, 'மங்காதிருத்தல் கண்டு, நாட்டுச் சிறப்பு என்ற தலைப்பினை வைத்துக் கொண்டு, பழந்தமிழ் -- இலக்கியங்கள் கண்ட ஐந்திணை வளங்களையும் அவை ஒன்றில் ஒன்று மயங்கும் - நயத்தினையும் அணி பெறக் கூறினர் : நகரச் சிறப்பு என்ற தலைப்பினை மேற் கொண்டு, பழந்தமிழ் நாட்டின் பல்வேறு செல்வச் சிறப்புக்களையும் பண்புறக் கூறினர். அவர் கூறும் அவ்வியற்கை வளமோ, செல்வச் சிறப்போ', அவர் கூறும்