பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

காலநிலை கண்டு, அவற்றைப் பாராட்டுவதும் பழிப்பதும் செய்யாது, அவ்விலக்கியங்கள் போற்றும் பொருள் நிலை கண்டு, அப் பொருள்களை அவை உணர்த்தும் நெறிமுறை கண்டே, அவற்றிற்கு உயர்வு தாழ்வு கற்பித்தல் வேண்டும்.

இலக்கியங்கட்கும், அவ்விலக்கியம் தோன்றிய காலங்கட்கும் உள்ள தொடர்பு இஃதாகவே, ஓர் இலக்கியத்தின் உண்மை இயல்பினை, உள்ளவாறு உணர்ந்து மதிப்பிடல். அவ்விலக்கியம் தோன்றிய காலத்தின் சூழ்நிலையினை உணர்ந்தார்க்கல்லது இயலாது. ஆகவே, இமயம் வென்று, இறவாப் புகழ்பெற்று விளங்கிய மூவேந்தர் ஆட்சிக் காலம் முதலாகத் தமிழ் நாட்டில் தோன்றி வழங்கும் இலக்கியங்களின் இயல்புகளை, அவை தோன்றிய காலங்களின் சூழ்நிலையோடு ஒருங்கு கண்டு ஆராய்ந்து காண்போமாக.