பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

உள்ள உரம் அவள் பால் உண்டு என்பன போலும் எண்ணங் கொண்டு கவலையற்றிருப்பது அறிவுடைம்ை யாகாது என் தோழியை மணந்து கொள்ளும் மனம் உடை யார் எண்ணற்றேர் உளர். அவள் பெற்ருேரும் அவளே அவள் கருத்தறியாதே தாம் விரும்பும் ஒருவனுக்கு மணம் செய்து கொடுத்தும் விடுவர்; அவ்வாருகிவிடின், அவள் கினக்கு அரியள் ஆவள்: அம்மட்டோ என் தோழியின் உள்ளமேர் மிக மிக மென்மை உடையது; ஆனால், அவள் உன்பால் கொண்டிருக்கும் அன்பால், இப்போது அடை யும் துயரமோ அளவற்றது. அத்துயரம். மேலும் மிகுமாறு, நீ கவலையற்றிருப்பின், அத்துயர்க் கொடுமையினைத் தாள மாட்டாது அவள் உள்ளமும் உடலும் ஒருங்கே அழிந்தே போம். அதலுைம் அவள் நினக்கு அரியளவள். இது உறுதி. ஆகவே, உரிய காலத்தில், உரிய முறையோடு வந்து மணந்து கொள்வதற்காம் ஏற்பாடுகள் விர்ைந்து மேற்கொள்வாயாக!" என்று கூறி முடித்தாள். JಖT மரங்களின் இயல்புகளை எடுத்துக் காட்டி, அதன் வழியே தன் காதலியின் கிலேயினயும் தன் கடமையின்யும் நினைப்பூட்டிய தோழியின் சொல் கேட்ட அவ்வாண்தகை மணத்திற்காம் ஏற்பாடுகளே விரைந்து மேற்கொண்டு முணந்து மாண்புற்றன்.

தமிழகத்தின் சிற்றுர் ஒன்றில் நிகழ்ந்த இந் நிகழ்ச்சி ஒரு பெண்ணின் காதல், அதைப் பெற்றேன் ப்ேர்ன்பு, தன் கடமையில் தவறிக் கூறுவன கூறி அவ்விரு அன் புள்ளங்களை ஒன்றுபிணித்த தோழிப் பெண்ணின் பேரறிவு ஆகிய உயர்ந்த பண்பாடுக்ளக் கொண்டிருத்தல் கிண்ட்