பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

இலங்கைக் காட்சிகள்

காம வேலவன். கதிர்காமத்துக்கு இந்த நாட்டிலிருந்து அடிக்கடி பக்தர்கள் போய்வருகிறார்கள். மிகப் பழங்கால முதற்கொண்டே கதிர்காம யாத்திரை செய்வதைத் தமிழ்நாட்டு அன்பர்கள் விரும்பினர்கள். கதிர்காமத்தைப்பற்றி அதிசயமும் அற்புதமும் நிறைந்த செய்திகள் தமிழ்நாட்டில் பரவின.

இவ்வளவு வகையில் நெருக்கம் இருந்தாலும் இந்தியாவும் இலங்கையும் வெவ்வேறு நாடுகள். ஆதலால் அமெரிக்காவுக்குப் போவதற்கு என்ன என்ன முன் ஏற்பாடுகளை அரசாங்கத்தின் மூலம் செய்ய வேண்டுமோ அந்த ஏற்பாடுகளை இலங்கை போவதற்கும் செய்யவேண்டும். இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போவதற்கு முதலில் இந்திய அரசாங்கத்தின் பாஸ்போர்ட்டு வாங்க வேண்டும். இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு உரிய அநுமதிச் சீட்டுத் தான் 'பாஸ்போர்ட்டு'. 'பாரதநாட்டின் ஜனாதிபதியின் உத்தரவுப்படி, அந்த அநுமதி நமக்கு அளிக்கப்படும்.

போலீஸ் கமிஷனர் காரியாலயத்துக்கு முதலில் விண்ணப்பம் போட்டு அவர்களுடைய விசாரணைக்கு உட்படவேண்டும். நம்முடைய சுய சரித்திரம் முழுவதையும் அவர்களுக்குச் சொல்ல வேண்டி வரும். எங்கே பிறந்தோம், தகப்பனர் எந்த ஊரில் இருந்தார், எங்கே வாசித்தோம், என்ன என்ன வேலைகள் செய்தோம், என்ன என்ன இயக்கங்களில் கலந்துகொண்டோம் என்பனபோன்ற பல கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டி வரும். நாம் படித்த பள்ளிக்கூடங்களையும், வாங்கின அடிகளையும், செய்த விஷமங்களையும்