பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

இலங்கைக் காட்சிகள்

சொல்லுகின்றன. இரண்டு மூன்று ஏரிகளை ஒன்றாக்கிப் பராக்கிரம சமுத்திரம் என்ற பெரிய நீர்நிலையை அமைத்து வேளாண்மையை வளரச் செய்தான். இந்தப் பெரிய ஏரி பதினான்கு மைல் சுற்றளவுள்ளது என்று சொல்லுகிறார்கள். கலைஞர்களுக்கு வேலை கொடுத்துச் செங்கல்லாலும் கருங்கல்லாலும் அரண்மனையும் கோயிலும் அமைக்கச் செய்தான். வண்ணத்தால் ஓவியம் வரையச் செய்தான். இலக்கிய வளமும் இவன் காலத்தில் சிறப்பாக இருந்ததாம்.

இலங்கைச் சரித்திரத்தின் பொன்னேடு பராக்கிரம பாகுவின் ஆட்சிக் காலம். அதைக் காட்டுக்கிடையே உள்ள இன்றைப் பொலன்னறுவை தன் அழிந்த அங்கங்களால் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது.