பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பத்தினித் தெய்வம்

37



நோக்கித் தொகுத்த கொண்டையாக இருக்க, இந்தத் திருவுருவம் காட்சியளிக்கிறது.

சிலப்பதிகாரத்தில் செங்கோடென்று வருவதையும், அங்குள்ள திருவுருவம் ஒற்றை நகிலும் ஓங்கிய கொண்டையும் உடையதாக இருப்பதையும் சில ஆராய்ச்சிக்காரர்கள் பார்த்தார்கள். "கண்ணகியின் திருவுருவம் இது. யாரோ இதைப் பிற்காலத்தில் மாதொரு பாதியன் என்று கதை கட்டிவிட்டார்கள்” என்று சொல்லத் தொடங்கினார்கள். ஒற்றை நகிலோடு அந்தத் திருவுருவம் நிற்பதே அவர்கள் ஆராய்ச்சிக்கு முக்கியமான ஆதாரம்.

இந்த நினைவினால்தான் என் மனம் திருச்செங்கோட்டுக்குப் பிரயாணம் செய்தது. மறுபடியும் கொழும்பிலுள்ள நூதன சாலைக்கு வந்தது. பிறகு சிலப்பதிகாரத்தில் புகுந்தது.

கண்ணகி பாண்டியனுக்கு முன் சென்று கனற்பொறி பறக்கும் கண்ணுடன் வழக்குரைத்தாள். அவன் சிங்காதனத்தில் இருந்தபடியே உயிர் நீத்தான். பிறகு அவள் வெளியே வந்து தெய்வத்தையும் முனிவரையும் பிறரையும் அழைத்துப் புலம்பினாள். அதன்பின்,

“இடமுகில கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அமைந்து
மட்டார் மறுகில் மணிமுலையை வட்டித்து
விட்டெறிந்தாள்.”

அப்படிப் பறித்து எறிந்தது இடநகில். ஆகவே,வேங்கை மரத்தின்கீழ் நின்றபோது அவளுக்கு இருந்தது வலப்பக்கத்து நகில்.