பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

இலங்கையில் ஒரு வாரம்

என்பவர். பத்து வருஷத்துக்கு முன்னால் நான் இலங்கை சென்றிருந்தபோது இவரை இலங்கையின் எரிமலை என்று பலரும் சொன்னார்கள். தீப்பொறி பறக்கும்படி சிங்கள மந்திரிகளைத் தாக்கியும் தமிழர் உரிமைகளைத் தாங்கியும் பேசுவார். இவர் போகுமிடங்களுக்கெல்லாம் நெருப்பணைக்கப் பின்னோடு ஒரு ‘பயர் என்ஜின்’ போகும் என்று வேடிக்கையாகச் சொல்வார்கள்.

இத்தகைய வீராவேசத்துடன் ஸ்ரீ பொன்னம்பலம் கட்சியார் சென்ற தேர்தலில் போட்டியிட்டுப் பழைய பிரமுகர்களைத் தோற்கடித்தார்கள். சில நாள் வரையில் இலங்கைப் பார்லிமெண்டில் போராடியும் வந்தார்கள். பிறகு ஒரு நாள் ஸ்ரீ பொன்னம்பலம் ஸ்ரீ சேனநாயகாவின் மந்திரி சபையில் மந்திரியாகிவிட்டார்! மந்திரி வேலை நன்றாகவே பார்த்துவருகிறார். பேச்சும் முன்னைவிடத் தீவிரமாகவே பேசிவருகிறார். எனினும், இது அவருடன் சேர்ந்திருந்தவர்களிலேயே சிலருக்குப் பிடிக்கவில்லை.

அப்படிப் பிடிக்காமல் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிச் சிலர் ‘தமிழரசுக் கட்சி’ என்ற புதிய கட்சியை அமைத்திருக்கின்றனர். இந்தக் கட்சியின் தலைவர் ஸ்ரீ செல்வநாயகம். தமது கட்சியைப் பிரசாரம் செய்வதற்காகச் “சுதந்திரன்” என்னும் தினப் பத்திரிகையை இவர் ஆரம்பித்து நடத்திவருகிறார். அதில் பொருள் நஷ்டமும் அடைந்து வருகிறார் என்று கேள்விப்பட்டேன்.

“சுதந்திரன்” ஆசிரியரும், மற்றும் அங்குள்ள உதவி ஆசிரியர் சிலரும் என் நண்பர்கள். எனவே, அவர்களைச் சந்திக்கச் “சுதந்திரன்” காரியாலயத்துக்குப் போனேன். அங்கே ஸ்ரீ செல்வநாயகம் இருந்தார். அப்-