52
இலங்கையில் ஒரு வாரம்
வரவேண்டும். இல்லாவிட்டால் உங்களைத் திரும்பிப் போக விடமாட்டோம்!” என்றார்.
டாக்டர் நல்லநாதனின் இல்லம் சேர்ந்ததும் மறுபடியும் அதே நண்பரைப் பார்த்தேன். “நீங்கள் கோவி லுக்கு வர வேண்டும். எங்கள் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள வேண்டும்! இல்லா விட்டால் விட மாட்டேன்!” என்றார். இந்த நண்பரின் பெயர் கே. வி. எஸ். சுந்தரம் என்றும், கொழும்பில் பிரபல வர்த்தகர் என்றும் அறிந்தேன்.
“கோவிலுக்கு வரவேண்டும்; கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விட மாட்டேன்!” என்று அவர் மேலும் பத்துப் பன்னிரண்டு தடவை சொன்ன பிறகு, எனக்குக் கோபம் வந்து விட்டது.
“எந்தக் கோவிலுக்கு?” என்று கேட்டேன்.
“முருகன் கோவிலுக்கு” என்றார் ஸ்ரீ கே. வி. எஸ். சுந்தரம்.
“எந்த முருகன்?” என்றேன்.
சிறிது திகைத்துவிட்டு, “ஒரே முருகன் தான். அவர்தான்!” என்றார்.
“ஒரே முருகன் தான் என்றால், அவரை நான் தமிழ் நாட்டில் பார்த்தேனே? இங்கே எப்போது வந்தார் ?”
“முன்னமே வந்துவிட்டார். வெகு காலமாக இங்கேதான் இருக்கிறார்.”
“இது என்ன ஐயா, வேடிக்கை? வெகு காலமாக இங்கே இருக்கிறார் என்றால், இலங்கையின் பிரஜையாகப் பதிவு செய்து கொண்டிருக்கிறாரா?”
ஸ்ரீ சுந்தரம் விழித்துப்போனார். அவருடைய விழிப்புக்கு எனக்குக் காரணம் தெரியாமலில்லை. முருகப்-