பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

இலங்கையில் ஒரு வாரம்

பாகனை மருமகனாக அடையப் போகிறாரோ?” என்று எழுதிவைத்தேன். இந்தக் கலியாண விளம்பரம் வெகு சீக்கிரத்திலேயே பலன் அளித்தது. பெண்ணைப் பெற்ற ஒரு பாக்கியசாலி இவரை மருகராக அடைந்தார். இன்றைக்கு ஸ்ரீ அம்பிகைபாகன் தம் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு அம்பிகையைப் பெற்று இல்லறம் நடத்தி வருகிறார். அவருடைய வீட்டில் சின்னஞ்சிறு குழந்தைகள் மழலை பேசி ஓடியாடுகின்றன!

இந்தக் காட்சியைப் பார்த்து மகிழ்ந்தேன். உடனே, ஸ்ரீ இராஜ அரியரத்தினத்தின் ஞாபகம் வந்தது. அடாடா! இதோ ஒரு அருமையான இளைஞர் இன்னும் பிரம்மச்சாரியாக இருந்து வருகிறாரே? இதனால் இலங்கைத் தமிழர் சமூகம் எத்தனை நஷ்டம் அடைந்து வருகிறது? எந்தப் பாக்கியசாலி இவரை மருகராக அடையப் போகிறாரோ?

யாழ்ப்பாணத்தில் “ஈழ கேசரி” என்னும் வாரப் பத்திரிகை பல ஆண்டுகளாகச் சிறப்பாக நடந்து வருகிறது. “இந்து சாதனம்” ஹிந்து சமயப் பிரசாரத்துக்குச் சாதனமாயிருந்து வருவதுபோல், “ஈழ கேசரி” இலங்கையில் உள்ள தமிழ் மறுமலர்ச்சி எழுத்தாளருக்கு ஓர் அரிய சாதனமாக விளங்கிவருகிறது. இந்தப் பத்திரிகையைத் திறம்பட நடத்திவரும் ஆசிரியர் ஸ்ரீ இராஜ அரிய ரத்தினம். அருமையான பிள்ளை; திறமையான எழுத்தாளர்; குணம், தங்கக் கம்பிதான்! இதற்கு மேலே நான் சொல்ல வேண்டியதில்லை. பிறகு, பெண்ணைப் பெற்ற பெரியவர்களின் அதிர்ஷ்டம்!

“ஈழ கேசரி” பத்திரிகையின் அதிபர் யாழ்ப்பாணத்துப் பிரமுகர்களில் ஒருவரான ஸ்ரீ பொன்னையா அவர்கள். இந்தச் சிறந்த பத்திரிகையை நடத்துவ-