பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

எதற்காக ?

இந்தியாவின் எல்லைக்குள்ளையே தனது ஆள்காட்டி விரலை நீட்டி இங்குண்டா, அங்குண்டா உமது குரல் எனக் கேட்டவர்களுக்கு, கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு, கேட்கலாமா என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, ஏன் உலகக் கண்ணோட்டக்காரர்களுக்கு இந்தியாவில் மட்டிலுமல்ல, அலைகடலுக்கப்பாலும் அன்பர்கள் மாத்திரமல்ல, ஆதரவாளர்கள் மாத்திரமல்ல, எமது திராவிட முன்னேற்றக் கழக முத்திரை பெற்ற இளைஞர்கள் ஏராளமானவர்கள் உண்டு.

கொழும்பு கோட்டைக்கெதிரில் கம்பீரமாகப் பறக்கும் எமது கருப்பைக் காலத்தோடு மறைக்கும் சீறி மேலேரும் சென்னிறக் கொடியைப் பாரீர் என்று காட்ட சிங்களம் செல்ல நினைத்தோம். நிர்மாண வேலைகளைத் தொடங்கினோம். வலிமையை வாயளவில் பெற்ற தமது சர்க்கார், ‘ஐயோ நீங்களா அங்கு செல்கிறீர்’ என வாயைப் பிளந்தது ஒருதரம்.

விட்டோமா, மறுமுறை மீண்டும் நமது நோக்கம் டெல்லி பாராளுமன்றம் ஏறி கொக்கரித்தது. சரி, என்றனர் சலிப்பாக. அவர்கள் கதை அந்தத் தீவிலே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலங்கை_எதிரொலி.pdf/5&oldid=1321219" இலிருந்து மீள்விக்கப்பட்டது