பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

இலங்கை எதிரொலி


வர்க்கத்தில் பேதா பேதத்தை உண்டாக்கி அதன் நிழலில் உல்லாசமாக வாழும் உலுத்தன் இருக்கின்றான். நாங்கள் தான் இறைவனுக்கு அடுத்தபடி என்று சொல்லும், நாதடித்த நாடோடியிருக்கின்றான். நாங்கள் உழைக்க மாட்டோம், மற்றவர்தான் எங்களுக்கு உழைத்துப்போடவேண்டும் என்று சொல்லும் ஊதாரி அங்கே இருக்கின்றான். ஆகவேதான் அந்தக் கொடுமைகளை ஒழிக்க அங்கே வகுப்புப் பூசல்கள் இருக்கின்றது. இருக்தத்தான் செய்யும், ஆனால் அந்தக் கொடுமைகள் ஒன்றுமேயில்லாத இங்கே எப்படி வகுப்புப் பூசல்கள் உண்டாக்க முடியும். உண்டாகவும் முடியாது. அந்த விதமான பூசலை யுண்டாக்க யாராவது எண்ணினால் நிச்சயமாக அவர்கள் தோல்வி கொள்வார்கள் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக எச்சரிக்கை செய்கிறேன்.

இலங்கையில் எங்கள் கணக்குக்கு அதிகாக வளர்ந்திருக்கும் இயக்கத்தின் சக்தியை எப்படி பயன் படுத்துவது என்பதுதான் இப்போது எங்கள் கவலை. “திராவிட நாடு திராவிடர்க்கே”, என்ற பேரொலி இங்கே மட்டிலும் எழவில்லை. இதே நேரத்தில் வியட்நாமில், பர்மாவில், மலேயாவில், சிங்கப்பூரில், கோலாலம்பூரில், இரங்கூனில், பீஜித் தீவில், அந்தமானில், பம்பாயில், ஐதராபாத்தில். இன்னும் உலகத்தின் எந்தெந்த பகுதிகளில் திராவிடர்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம், ‘திராவிட நாடு திராவிடர்க்கே’ என்ற பேரொலி வான்முட்ட எழும்பிக்கொண்டிருக்கின்றன. அகில் உலகத்தில் வளர்ந்துவரும் சக்தியை ஒன்றாகத் திரட்டி, கண்டிப்பாக திராவிட நாட்டைத் தனி நாடாக்குவோம்