295
கச் சகிக்கவில்லை; எனவே நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன்!” என்ருன் அசாய்.
'பஸ்ஸில் நீ அவரைப் பார்த்தாயா?” "அவர் பயந்து போயிருந்தார். மிகுந்த கலவரத் தோடு அவர் பஸ்ஸில் ஏறினர், கறுப்பு மூக்குக் கண் ணுடி அணிந்திருந்தார் அவர்.”
'அவர் உன்னைப் பார்த்தாரா?” அசாய் ஆனந்தமாக நிம்மதியுடன் சிரித்தான். 'இல்லை. அவர் என்னைப் பார்த்திருந்தாலும், அவர் என்னேடு பேசுவதற்குத் துணிந்திருக்கமாட் டார். அவர் எங்கோ தப்பி ஓடிக்கொண்டிருந் தார்!’
தன் உதடுகளைச் சுற்றிலும் நாக்கை இழைய விட்ட வண்ணம், சப்பணமிட்டுக் குந்தியிருந்த நிலை யிலிருந்து ஃபான் எழுந்தான். அவன் ஆகாயத்தை அண்ணுந்து நோக்கினன்; வல்லுாறுகள் சில பறந்து கொண்டிருந்தன; அதோ பாருங்கள். பறவைகள் உட்பட எல்லோருமே தெற்கு நோக்கித்தான் பறந்து கொண்டிருக்கிருர்கள்!” என்ருன்.
ஸ்வாட் திரும்பி வந்தாள். போக்லோ ஆட்கள் சிலரைக் கண்டுபிடிக்க அவள் முயற்சி செய்து கொண்டிருந்தாள். -
அசாயின் கையைப் பற்றியவண்ணம், " நீ இப் போது பசியோடிருக்கிருய். எனக்குத் தெரியும்" என்று கூறினுள் லெய்வா,
.." 'இல்லை; எனக்குப் பசியில்லை. பணம் கொடுத்து சாப்பிட்டு விட்டேன்.”