பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204★இல்லம்தோறும் இதயங்கள்




வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் தேவதாசிகளைப் பற்றி ஒரு ஆராய்ச்சிப் புத்தகம் எழுதுவற்தகாக வந்தவர். இவரது தமக்கை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியுடன் நெருங்கிப் பழகியவர். அப்போதுதான் தேவதாசி ஒழிப்புச்சட்டம் வந்திருந்தது. புதிய வாழ்க்கை கிடைக்கப் போகிறது என்று மகிழ்ந்திருந்த தேவதாசிகளை, அவர்கள் குடும்பத்தின விரட்டினார்கள். அந்த அபலைகளுக்கு வாழ்வளிப் பதற்காக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவ்வை இல்லத்தைத் துவக்கினார். தமக்கையின் அறிமுகக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு அவருடன் ஆராய்ச்சி பற்றிப் பேசப் போனார். அந்த அம்மையாருக்கு டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி அறிவுரை கூறினார். "ஆயிரம் ஆராய்ச்சிகளை விட அதில் கிடைக்கும் பட்டங்களைவிட, ஒரு அபலைக்காவது ஆதரவளிப்பது தனக்கே ஒரு காலத்தில் தற்காப்பாக மாறும்” என்றார். தர்மம் என்பதே ஒரு தற்காப்பு யக்ளும்தானே! அதோடு, எளியவர்களை ஆய்ந்து அவர்களை வைத்துப் பட்டம் பெற்று அவர்களுக்காக எதுவும் உதவவில்லையானால் அது எழுத்தாளனாக இருந்தாலுஞ் சரி ஆராய்ச்சி மேதையாக இருந்தாலுஞ் சரி அதுவே அவர்களுக்கு ஒரு தற்கொலை தர்மமாகும் என்றார்.

சிந்தனையில் மூழ்கிப்போய், தமிழகத்தைச் சுற்றிப் பார்த்த இந்த மாது, தேவதாசிகளைவிட, தொழு நோயாளிகள் மிகக் கேவலமாக நடத்தப்படுவதைக் கண்நோகக் கண்டார். தேவதாசிகள் வாழ்கிறபடி வாழ விரும்பாததால் துரத்தப்பட்டார்கள். ஆனால் இவர்களோ, வாழ்கிறபடி வாழ விரும்பினாலும் வாழாதே என்பது போல் துரத்தப் பட்டவர்கள். கணவன் மனைவியாலும், மனைவி கணவனாலும், பிள்ளைகள் பெற்றோராலும், பெற்றோர்கள் பிள்ளைகளாலும் துரத்தப்பட்டவர்கள்.

அன்று, அவர்களுக்காகக் கட்டப்பட்ட இந்த இல்லத்திற்கு இப்போது நினைவுச் சின்னமாக இருக்க