பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210 ★ இல்லம்தோறும் இதயங்கள்


 வாதை உயிரோடு போய்விட்டது. என்ற லேசான நிம்மதியும் ஏற்பட்டது.

ரத்தினம் அனுதாபம் சொட்டச் சொட்டப் பேசினான்.

"கலங்காதம்மா. ஒனக்கே தெரியும், ஒங்க அப்பாவும் நானும் கூலிக்காக வயலுல ஒருவர ஒருவர் முறைச்சிருக்கோம். ஆனால் அந்த பெரிய மனுஷன் என்ன செய்தார் தெரியுமாம்மா? ராமபத்ரன் தேவடியா மவன், ஒனக்கு அது வந்துட்டுன்னு சொன்ன மறுநாளே இவரு தரத்துக்குடில வக்கீலப் பாத்து உயில் எழுதி வச்சிட்டாரு. சொத்துல ஒனக்கு உரிம உண்டுன்னாலும், அவரு உயிலுல தெளிவா எழுதிட்டாரு. மாசுலாங்குளத்துப் பாசன வயலும், பேயான் தோட்டமும் ஒனக்கு. ஒரு லட்சம் ரூபாய்க்கி மேல பெறும் உயிலை என்கிட்டதான் தந்தாரு. 'நான் செத்த பிறவு ஒன் உயிரக் கொடுத்தாவது இந்த உயில நிறைவேத்துன்னு சொன்னாரு அவரு செத்ததும் ஒன்னோட அண்ணன் தம்பிங்க என்கிட்ட ஆள் அனுப்பி ஐயாயிரம் பத்தாயிரம் தாரதாயும் உயில கிழிக்கும்படியும் சொன்னாங்க. நான் காலுல கிடக்குறத கழத்துனேன். உயிலப்பத்தி ஏன் அப்போ ஒன் கிட்ட சொல்லல தெரியுமா? என்னதான் புருஷன எதிர்த்து போடான்னு நீ சொல்லணுமுன்னு நான் ஒன்கிட்டச் சொன்னாலும் அவனோட நீ வாழனுங்ற ஒரு ஆசை. உயிலைப்பத்தி சொன்னால் ஒருவேள புருஷங்கிட்ட தைரியமாய் கோவிச்சு காரியத்த கெடுத்துப்பிடுவியோ என்கிற பயம். உயிலுல ஒன்னைப்பத்தி எழுதியிருக்கிற இடத்தைப் படிக்கேன் கேளு! பிறந்தபோது மட்டும் மகளா இருந்து அப்புறம் தாயா மாறிப்போன என்னோட செல்லமகள், என் மூச்சுக்கு காற்றாயும், உடலுக்கு உயிராயும் ஆகிப்போன என் தங்கமகள் நல்லதங்காள் மாதுரி ஆகிக்கிட்டு