பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216 ★ இல்லம்தோறும் இதயங்கள்




அசைக்க முடியாத முடிவுக்கு வந்துவிட்டதால் மணிமேகலை அசைந்தாலும் கலையாத தூக்கத்தில் சங்கமமானாள். மறுநாள் வெங்கடேசன் அரை மூட்டை காய்கறிகளோடு வந்தான். 'கூத்து கோவிந்தன், நான்குபடி உப்பு வாங்கிக்கொண்டு வந்தான். அதுவும் தீர்ந்து போயிருந்தது.

அவள் முடிவைத் தெரிவித்ததும் சற்று அயர்ந்துபோன வெங்கடேசனிடம் "அன்பு ஒரு சக்தின்னு சொன்னே மில்லா, இப்போ அந்த அன்பின் சக்தி நான். இந்த சக்தி பத்ரகாளியாகவும் மாறும் என்பதைக் காட்டப் போகிறேன். என்னை ஆசீர்வதியுங்கள்" என்று சொன்னபோது அவனால் 'சிவனே என்று இருக்க முடியவில்லை. அந்த சக்தியின் பெயரில் தன் ஸீனியர் மூலமாக, மிஸ்டர் ஜெயராஜூக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினான். அறுபது பவுன் நகை வேண்டும். ஜீவனாம்சம் வந்தாக வேண்டும். நோட்டீஸிற்கு எதிர் நோட்டீஸ் வரவில்லை. இரண்டாவது நோட்டீஸ் அனுப்பினால், விலாசதார் வாங்க மறுக்கிறார். என்ற தபால் அலுவலகக் குறிப்புடன் ரிஜிஸ்டர் நோட்டீஸ் திரும்பி வந்தது. இனிமேல் கோர்ட்டுக்குத்தான் போக வேண்டும். அது ஆயுள் வரைக்கும் நீடிக்கும். என்ன செய்யலாம்?

இந்தச் சந்தர்ப்பத்தில், உடனே வரவும் என்ற கடிதத்தைப் படித்தவுடனேயே ரத்தினம் வந்துவிட்டான். மணிமேகலைக்கும், வெங்கடேசனுக்கும் உபதேசத்தான்.

"இதுக்குப் போயா கவலப்படுறிய? நம்மள மாதுரி ஏழைங்க கோர்ட்டுக்கு அபராதம் கட்டப் போகலாமே தவிர, நியாயம் கேட்கப் போகக்கூடாது. அடிக்கிறதுல அடிச்சால் கிழியுறதுல கிழியட்டும். நாளைக்கே ஜெயராஜ் வீட்டுக்குப் போவோம். அவன் தலையைப் பிடிச்சால் முடியைப் பிடிப்போம். முடியைப் பிடிச்சால் தலையைப்