பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் + 217




பிடிப்போம். நானும் பழைய செருப்பத்தான் போட்டிருக்கேன்.”

அந்த இல்லத்தில் ஒரு காரும் இருந்தது.

வெங்கடேசனும், ரத்தினமும் பின்னால் ஏறிக்கொண்டார்கள். மணிமேகலை வண்டியை ஒட்டினாள். நல்ல வேளையாக ஜெயராஜைக் கட்டியதில் இந்த 'டிரைவிங்' நன்மையாவது கிடைத்தது. இல்லையானால், டிரைவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டியதாயிருக்கும். கார், மதுராந்தகம் வந்தபோது அங்கே மணிமேகலையைப் பார்ப்பதற்காக, சென்னையில் இருந்து திண்டிவனம் பஸ்ஸில் ஏறி அந்த இல்லம் வழியாக ஏதாவது லாரி போகுமா என்று தேடிக் கொண்டிருந்த கூத்து, கோவிந்தன், வண்டியைப் பார்த்ததும் கையாட்டி காலாட்டி அதை நிறுத்தி ஏறிக் கொண்ட பிறகு சிரித்துக்கொண்டே 'ஊய் ஊய் என்று விசிலடித்தான். கார் புறப்பட்டது.

அரக்கோணத்திற்குள் வந்தவுடனேயே அவளால் காரை ஒட்ட முடியவில்லை. கைகள் ஆடின. 'என் பிள்ள எப்படி இருக்கானோ? எப்படி இருக்கானோ?

எதிரே வழக்கத்திற்கு மாறாக இடது பக்கமாகவே வந்த லாரியில் மோதாமல், சைக்கிள்களை அடிக்காமல், அவள் எப்படியோ-தெய்வாதீனம் என்று சொல்லலாம். தன் மாஜி வீட்டின் முன்னால் நிறுத்தினாள். பையனைப் பார்க்கப் போகிறோம் என்ற இன்பப் பரவசத்துள் ஆழ்ந்து அவள் காரில் இருந்து இறங்கினாள்.

வீடு அப்படியேதான் இருந்தது. மாமனார், அதே சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். இப்போது சற்று அதிகமாகச் சாய்ந்ததுபோல் இருந்தது. ஜெயராஜூம், சங்கரனும் வீட்டில்தான் இருந்தார்கள். இந்திராவைக்