பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் + 221




ஒப்பன உதைக்கிற பயலே. வெட்கங்கெட்டுப் போனது நீயா என் தங்கச்சியாடா ? அவளைத் துரத்திட்டு அவளோட நகை நட்டுங்கள வச்சிருக்கதை விட நீ தூக்குப் போட்டுச் சாவலாம். யாரப் பாத்துடா..?”

மணிமேகலை தான் ஆடவில்லையானாலும் அவள் தாலி ஆடியதுபோல்,

"அண்ணே! அவர் சட்டப்படி இன்னும் என் கணவர். இனிமேல்தான் டைவர்ஸ் செய்யணும். அதுவரைக்கும் சும்மா இருங்க. ஏங்க ஒங்களத்தான் ! என் நகைகள இப்போ தரப்போறிங்களா இல்லியா?" என்றாள்.

இந்த அமளியில் சங்கரன் திருட்டுத்தனமாக டெலிபோன் பக்கம் போனான். இதைப் பார்த்த ரத்தினம் "டெலிபோனை கீழே வைக்கிறியா இல்ல அந்த டெலிபோன் குமிழிய வச்சே ஒன் குடல குத்தி எடுக்கணுமா?அதை வைடா படுவா!” என்றான்.

வெங்கடேசன் அமைதியாகப் பேசினான்.

"நீங்க போலீஸுக்குப் போன் பண்ணணுமுன்னால் பண்ணுங்க. போலீஸ் வரட்டும். மனைவி இருக்கையில் அவள் சம்மதம் இல்லாமல் இன்னொருத்தியக் கல்யாணம் பண்றது ஒரு கிரிமினல் குற்றம். நான் பேய்லபிள் அபன்ஸ். அண்டர்ஸ்டாண்ட்! இவருக்கு ஏழு வருஷம் வாங்கிக் கொடுக்காட்டால் நான் வக்கீல் திருமலாச்சாரியோட ஜூனியர் இல்ல; போன் பண்ணுங்க ஸார்!"

மணிமேகலை மீண்டும் பேசினாள்.

"நகையைத் தரப்போறீங்களா இல்லியா? சும்மாச் சொல்லுங்க! அறுபது பவுனையும் அடகு வச்சிருந்தாலும் பரவாயில்ல. தர்மர் மாதிரி டயம் கொடுக்கிறேன். சொல்லுங்க. மானம், வெட்கம் மனுஷனுக்கு இருக்கணும்.