பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 223



இன்னொண்ணயும் மறந்துட்டேன். எங்கப்பா கொடுத்த வரதட்சணை பணமும் வந்தாகணும். வாங்காமல் விடமாட்டேன்."

ஜெயராஜ் யோசித்தான். ஐடியா கேட்க மாமனர் ராமபத்திரன் இல்லை. அப்பாகிட்ட ஐடியாவே இல்லை. ஆகையால் தராட்டால். என்று சன்னமாகச் சொல்லி சொன்னதை விழுங்கி,விழுங்கியதைத் திருப்பிச் சொன்னான்.

ரத்தனம் முழங்கினான்:

"இந்தா பாருங்க ஸார்! நான் சொல்றத நல்லாக் கேளுங்க. எங்க வக்கீல் கிரிமினல் கேஸ் போடுவார்!"

வெங்கடேசன் இடைமறித்தான்.

"நோ நோ! கேஸ்-க்கு முன்னால இந்த பேக்டரிய முடக்கி ரிட் வாங்குவேன். ஏன்னா இதனோட வளர்ச்சியில என் கட்சிக்காரியோட நகைகள் அடமானமாயிருக்கு. என்கிட்ட எவிடென்ஸ் இருக்கு. நாளைக்கு யாரும் பேக்டரிக்குள்ள போக முடியாது. சும்மா ஏதோ போனால் போவுதுன்னு பார்த்தால்.”

ரத்தினம் தன் பேச்சை தடைபட்ட இடத்தில் இருந்து துவக்கினான்:

"அது அவரோட வழி. நான் என்ன செய்யப் போறேன் தெரியுமா? நாளைக்கே தெருவுல மைக்கை வச்சிக்கிட்டு என் தங்கச்சிக்கு ஏற்பட்ட அவமானத்தை தெருத் தெருவாச் சொல்லப் போறேன். என் தங்கச்சி ஒங்க தொழிற்சாலை முன்னால் சாகும்வரை அல்லது சொத்தும் நகையும் சரியாய் கிடைக்கும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போறாள். ஒங்க தொழிலாளிங்ககிட்ட இவள் கதையை பாட்டாய் சொல்லப் போறான். சும்மா வெறுங் கோர்ட்டு, வெறும் வழக்குன்னு போக நாங்க