பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சு. சமுத்திரம் ★ 53


“அப்படின்னா?”

“எப்படியோ. தான்தான் குடும்பத்தைக் கட்டிக் காப்பாத்துறதா அவருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டுட்டு. இதுக்கு மேலயும் அவரத் தாங்குனால், என் சுயமரியாதை தாங்காது.”

“உங்க அண்ணாவோட ஈகோவுக்கும் ஒங்களோட சுயமரியாதைக்கும் சின்னஞ் சிறிசுகள் பலியாகணுமா?”

“குடும்பத்தை விட்டு சொத்தோட பிரியுறது அண்ணா தான். நாம இல்ல.”

“எனக்கு தந்தி அடிச்சிங்களே-நான் வாரது வரைக்கும் பொறுக்கப்படாதா?”

“இப்போ வெள்ளம் கழுத்துக்குத்தான் வந்திருக்கு. தலைக்கு வரல. இன்னைக்கு செட்டில்மென்ட் பண்றதா ஏற்பாடு. ஒனக்கு சாமர்த்தியம் இருந்தால் தடுத்துப் பாரு. அப்பாதான் தந்தி கொடுக்கச் சொன்னாரு.”

“அப்போ ஒங்களுக்கு தந்தி கொடுக்க இஷ்டமில்லியா?”

“எனக்கும் இஷ்டந்தான். ஆனால் ஒரு வித்தியாசம். அப்பாவுக்கு சொத்து பிரியுறத பார்க்க இஷ்டமில்ல. எனக்கு நீ பிரிஞ்சத பார்க்க முடியல...”

“சும்மா பொறுப்பில்லாம பேசாதிங்க நீங்க கொஞ்சம் மனசு வச்சிருந்தால் இதைத் தடுத்திருக்கலாம். பேசாம காரை ஸ்பீடா ஓட்டுங்க.”

அரக்கோணத்தை விட்டு விலகியதுபோலவும், ஒட்டியிருப்பது போலவும் தனியாக இருந்த நான்கைந்து பெரிய வீடுகளிலேயே மிகப்பெரிய வீட்டின் முன்னால் கார் போய் நின்றது. ஜெயராஜ் டிக்கியைத் திறந்தபோது மணிமேகலை வராந்தாவிற்கு வந்தாள்.