பக்கம்:இல்லற நெறி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இல்லற நெறி


ஏற்படுவதற்குச் சிலமாதங்களுக்கு முன்பே வழக்கமாகவரும் மாதப்போக்கில் தவறுகள் ஏற்படும்; வெளிவரும் குருதி அளவில் குறையலாம்; அல்லது மாதவிடாயின் ஒழுங்கு முறை தவறி முன்னும் பின்னுமாக ஏற்படலாம். இங்ங்னம் ஒலமாதங்கள் நிகழ்ந்து பிறகு திடீரென்று நின்றுவிடுகின்றது:

சூதக ஒய்வு ஏற்பட்டதும் கருப்பை, சூற்பைகள், பெண் உறுப்பு: முதலியன வற்றிச் சுருங்கிவிடுகின்றன. சில பெண்கள் உருவத்தில் பருத்தும்விடுகின்றனர். ஆடவர்களைப் போன்று சிலரிடம் முகத்தில் உரோமம் முளைக்கும்; உடலில் ஏற்படும் இந்தவிதமான அறிகுறிகளை மருத்துவரிடம் காட்டி தக்க சிகிச்சையை மேற்கொள்வது நல்லது. நாற்பது வய திற்குமேற்பட்ட பெண்களிடம் சூதகஒய்வு ஏற்பட்ட பிறகு திடீரென்று பெண் உறுப்பினின்றும் குருதி கசிந்தால் அசட்டை செய்யாமல் மருத்துவரிடம் காட்டிச் சோதித்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாகப் புற்றுநோய் நாற் பது வயதிற்குமேல்தான் அதிகம் ஏற்படுகின்றது. அது கருப் பையில் நேர்ந்தால் இவ்வாறு ஒர் அறிகுறியுடன்தான் அதிகம் ஏற்படுகின்றது. அது கருப்பையில் ஏற்பட்டால் இவ் வாறு ஒர் அறிகுறியுடன்தான் தொடங்கும். இந்த அறிகுறி. புற்றுநோயின் தாமதப்பட்ட அறிகுறியே. ஆகவே, ஒவ் வொரு பெண்ணும் ஆண்டுதோறும் தம்மைப் பெல்விக் சோதனைக்கு உட்படுத்திக்கொள்வது நல்லது; முப்பது வயதி டகு மேற்பட்டவர்கள் இரண்டாண்டுகட்கு ஒருமுறை யாவது சோதனை செய்து கொள்ளவேண்டும். வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பது நல்லதல்லவா?

வெளிப்புறமாகத் தெரியும் பிறப்புறுப்புகளைப்பற்றி அடுத்த கடிதத்தில் விளக்குவேன்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

133 பெண் உறுப்பு-vulva: 134. புற்று நோய்-Cancer: 135; Quâadá G4’srā%ir-Pelvic examination,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/154&oldid=1285152" இலிருந்து மீள்விக்கப்பட்டது