பக்கம்:இல்லற நெறி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இல்லற நெறி


யேறும் திரவம் யோனியிலிருந்தோ, யோனிக்குழலிலிருந்தோ அன்றி கருப்பையிலிருந்தோ வருதல்வேண்டும். பிறப்புறுப்பு கள் நன்னிலையிலிருக்கும்பொழுது, மாதவிடாயின்பொழு தன்றி, யாதொரு ஒழுக்கும் வருதல் கூடாது. ஏனைய காலங் களில் தொடர்ந்து விடாது காணப்பெறும் ஒழுக்கு ஏதோ ஒருவித கோளாறின் அடிப்படையில் தோன்றியதாக வேண்டும். இந்த ஒழுக்கின் தன்மையை மருத்துவரிடம் சோதித்து அறிந்துகொள்ள வேண்டும்;

இக்கடிதத்தின் தொடக்கத்தில் காட்டின படத்தை மீண்டும் ஒருமுறை கூர்ந்து நோக்குக. யோனிலிங்கத்திற்கும் யோனிக்குழலின் நுழைவாயிலுக்கும் இடையில் மற்ருெரு சிறிய திறப்பு காணப்பெறுகின்றதல்லவா? இதுதான் சிறுநீர்ப் புறவழியின் திறப்பு ஆகும். இதன் வழியாகத்தான் இறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் வெளிவருகின்றது. இருபாவா ரிடையேயுமுள்ள சிறுநீர்ப்புறவழி வடிவத்திலும் செயலிலும் குறிப்பிடத்தக்க அளவு வேறுபாட்டுடன் அமைத்துள்ளது; ஆணிடம் இவ்வழி வளர்ந்து ஒன்பது அங்குல நீளம் உள்ளது; ஆண்குறி முழுவதிலும் இஃது ஊடுருவிச் செல்கின்றது; இது ஒது நீர் செல்லும் குழலாக உதவுவதுடன் புணர்ச்சியின் பொழுது விந்து வெளிப்படவும் வழியாக அமைகின்றது. பெண்ணிடம் இது கிட்டத்தட்ட நேராக, ஆல்ை குட்டை யாகவே, உள்ளது; இதன் நீளம், அவர்களிடம் ஒன்றரை அங்குலமே. அதனுடைய இருப்பு நிலையைத் தவிர அதற்கும் இனப்பெருக்க உறுப்புகளின் தொகுதிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. எனவே, சிறுநீர்ப் பைக்கும் யோனிக் குழலுக்கும் தொடர்பே இல்லை. சிறுநீரிப்பை தன்னிடமுள்ள இறுநீரை நேராகப் புறத்தே வெளிப்படுத்துகின்றது. ஆகவே, சிறுநீர் யோனிக்குழலினுள் வருவதற்குச் சந்தர்ப் பமே இல்லை;

மேலும், இப்படத்தை உற்றுநோக்கின், மூன்று திறப்பு கள் இருப்பது தெரியவரும்; இவை மூன்றும் ஒன்றை

ബങ്ങ

165, optili-Orifice,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/164&oldid=1285157" இலிருந்து மீள்விக்கப்பட்டது