பக்கம்:இல்லற நெறி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

இல்லற நெறி


16

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு,

நலன். நலனே விழைகின்றேன்.

கருக்குழலில் கருவுற்ற முட்டை மூன்று அல்லது நான்கு நாட்களில் கருப்பையை வந்தடைகின்றது. கருக் குழவினுள் இருக்கும்போதே அது வளர்ச்சியுறத் தொடங்கு கின்றது. அனுப்பிரிவுகள் தொடர்ச்சியாக நடந்த வண்ண மிருக்கின்றன. இந்நிலையில் கருப்பை புதிதாக உண்டான இளஞ்சூலை ஏற்றுக் கொள்வதற்கு தன்னைத் தயாராக்கிக் கொண்டுள்ளது. கருப்பையின் உள்ளே இருக்கும் அணைச் சவ்வு புதிய இழையங்களால் தடித்து அதிகமான குருதி யோட்ட நிலைகளைப் பெறுகின்றது. இந்நிலையை மாதவிடா யைப்பற்றிக் கூறும்போது விளக்கியுள்ளேன்.24 கருப்பை யில் நுழைந்த மூன்று அல்லது நான்கு நாட்களில் முட்டை கிறிது வளர்ந்த நிலையில் புதிதாக உண்டான அனைச் சவ்வில் தன்னை ஆழப் புதைத்துக் கொள்ளுகின்றது; மிகச் சிக்கலான செயலின்மூலம் ஏதாவது ஓரிடத்தில் தன்னை நன்கு பொருத் திக்கொள்ளுகின்றது; இந்த இடத்தில் அது கருப்ப காலம் முழுவதும் தங்கி வளர்கின்றது.

முதற் சூல்நிலை: கண்ணுக்குப் புலனாகாத மிகச் சிறிய இரண்டு உயிரணுக்களின் சேர்க்கையால் கருவுற்ற முட்டை குழந்தை உருவம் அடைவது வியப்பினும் வியப்பேயல்லவா? எனவே, இளஞ்சூல் வளர்ந்து குழந்தையாக மாறுவதன்நிலை களையும் நீ அறிந்துகொள்ள வேண்டும்; இதனை மிகச் சுருக்க மாக விளக்குவேன். விந்தணுவும் முட்டையணுவும் சேர்ந்து ஒரே அணு நிலையில் இருந்த கரு இரண்டு அணுக்களாகப்

24) இந்நூல்-பக்கம் 141

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/184&oldid=1285167" இலிருந்து மீள்விக்கப்பட்டது