பக்கம்:இல்லற நெறி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

இல்லற நெறி


பென்களிடமே உண்டாகின்றது: இப் பெண்களிடம் மாத விடாய் நின்று போகின்றது. மசக்கை உண்டாகின்றது. கொங்கைகள் பெருக்கின்றன. வயிற்றுச் சதையின் மீது கொழுப்பு அதிகமாகச் சேர்ந்து கருப்பிணியின் வயிற்றைப் போன்று நாளடைவில் வயிறும் புடைக்கின்றது. சிசு அசை வும் தென்படுகின்றது. இது குடல்களில் ஏற்படும் வாயுத் தேக்கத்தால் உண்டாவது. இப்பெண்கள் விரைவாகத் தாயாகப் போவதாக எண்ணி சில சமயம் நம்மில் மேற் கொள்ளப்பெறும் வளே காப்பும், சீமந்தம் போன்ற சடங்கு களையும் நடித்தி மகிழ்ச்சியடைகின்றனர். பின்னிரண்டு மாதங்களாகியும் குழந்தையே பிறக்காமற் போகும்போது தான் உண்மை நில தெளிவாகின்றது! இத்தகைய போலி கருப்பம் இளம் பெண்களிடமும் ஏற்படுவதுண்டு. என்னு டைய நெருங்கிய உறவினர் ஒருவரின் மருமகளுக்கு இந் நிலை ஏற்பட்டது, அவர் பணக்காரராதலின் பல்வேறு கொண்டாட்டங்களை நடத்திப் பிரசவத்திற்காகவும் சிற் நூலிருந்து நகர்ப்புறத்திற்குக் குடியேறிஞர், சில வாரங் களில் உண்மை நில்ை தெரியவந்தது. கண்ணிலான் பெற்றி ழந்தான் என உழலும் நிலேயே அவருக்கும் ஏற்பட்டது;

கருப்பகாலம்: கருப்ப காலம் சாதாரணமாக 280 நாட் கள்(பத்து சாந்திர மாதம், ஒன்பது காலண்டர்மாதம்) நீடிக் கின்றது. இக்காலம் ஆளுக்கு ஆள் மாறுபடுவதுமுண்டு. கருவுற்ற நான்முதல் கருவுயிர்க்கும் நாள்வரை 266நாட்கள் எனச் சராசரியாகவும் கணக்கிட்டுள்ளனர். ஒரு பெண்ணிடம் மாதவிடாய் காலம், கருப்பையின் வளர்ச்சி, சிசு அசையத் தொடங்கியகாலம் ஆகியவற்றைக்கொண்டு அவள் கருவு யிர்க்கும் நாளைக் கணக்கிடுகின்றனர். கடைசி மாதவிடாய் ஆனமுதல்நாள் தொடங்கி 280 நாட்கள் கழிந்த பின்னர் தான் பெண்கருவுயிர்ப்பாள் என்பது ஒரு கணக்கு. இந்த நாள் நினைவில் இல்லாதுபோயினும், முதல்குழந்தை பிறந்து மாதவிடாய்ஆகாது மறுபடியும் பெண் கருவுற்ருலும் இந்தக் கணக்கு தவறுகின்றது. இந்தக் கணிதமுறை எல்லாப் பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/196&oldid=1285173" இலிருந்து மீள்விக்கப்பட்டது