பக்கம்:இல்லற நெறி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 197

இடங்கொடுக்கின்றது. ஆல்ை, அதிக நாட்கள் அஃது இங்கு வளர முடியாது. நான்கு அல்லது எட்டு வாரங்களுக்குமேல் கருக்குழல் இளஞ்சூலைத் தாங்கமுடியாமல் உள்ளே வெடித்து விடும். கருக்குழல் இங்ங்ணம் வெடிக்கும்பொழுது கருப் பிணிக்குத் தாங்கமுடியாத வயிற்று நோவும் மயக்கமும் ஏற் படும் உடைந்த கருக்குழலிலிருந்து குருதி ஊற்றெடுத்து உள்ளேயேவெள்ளம்போல் ஒடிக்கொண்டிருக்கும்; வெளியே இதைக் காண முடியாது. ஆனல், முகத்தில் வியர்வை அரும்புதல், மூச்சுத்திணறுதல், தாகவிடாயால் நா வறண்டு போதல், கண்கள் இருட்டுதல், நாடி பலவீனப்படுதல். ஆகி யவை இது நிகழ்ந்தமைக்கு அறிகுறிகளாகும். இஃது இறப் பிலும் கொண்டு செலுத்தும்.

எந்தக் கர்ப்பிணியும் கரு கருப்பையில் வளர்கின்றதா, அன்றி அது கருக்குழலில் வளர்கின்றதாஎன்பதைத்தானகவே

படம்-29;: சாதாரண நிலையில் முதுசூல்; கருப்பையில் ேெ:இருப்பதைக்கோட்டுதல்.இ8 :

உணர முடியாது. மருத்துவரின் சோதனையால்தான்.இதன அறிந்துகொள்ளலாம். எனவே, ஒவ்வொரு பெண்ணும் கருப்பம் தோன்றியதும் மருத்துவரிடம் காட்டிச்சோதித்துக் கொள்வது நல்லது. மருத்துவர் இந்நிலையை அறிந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/203&oldid=597984" இலிருந்து மீள்விக்கப்பட்டது