பக்கம்:இல்லற நெறி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

இல்லற நெறி


உடனே வயிற்றைக் கிழித்துக் குழல் உடையா முன்னர் அத னைச் சாமர்த்தியமாக வெட்டி எடுத்துவிடுவர் உடைந்த நிலையிலும் அவர் உடைந்த கருக்குழலை வெட்டிஎடுத்துக் குருதிப் போக்கை நிறுத்தி தைத்து விடுவார். இழந்த குரு திக்கு ஈடாகப் புதிய குருதியைப் பாய்ச்சவும் செய்வார். இந் நிலை வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பது நன்று என் பதை நீ உணர்வாயாக.

கருப்பகாலப் பின்மாதங்களில் குருதிப் போக்கு : முன் மாதங்களில் ஏற்படும் குருதிக் கசிவு கருச்சிதைவின் அறிகுறி என்பதை நீ நன்கு அறிவாய். ஏழு மாதங்களுக்கு மேல் பெண் உறுப்பினின்றும் குருதி வெளிப்பட்டால் அது மிகவும் விபத்து விளைவிக்கும் ஒரு கோளாறின் அறிகுறி என்பதை நீ

器 3.

證 & *" نیک 沙 می س\ آ

படம்-30: கருப்பையில் முன் அடைப்பு நஞ்சு அமைந்

துள்ள நிலைகளைக் காட்டுதல். குறிப்பு: 1; கருப்பையின் வாயைச் சிறிதளவு நஞ்சு

அடைத்துக்கொண்டிருத்தல். 2. கருப்கையின் வாய் முழுவதையும் நஞ்சு

அடைத்துக்கொண்டிருத்தல்.

உணரவேண்டும். இதற்குக் காரணம் என்ன? பிரசவிக்கும் முன்னரே சில சமயம் நஞ்சு கருப்பையினின்றும் இலேசாகப் பிரிந்து கொள்வதால், இந்நிலை ஏற்படுகின்றது. இங்ானம் நஞ்சு பிரியத் தொடங்கினல், உள்ளே குருதிக் கசிவு ஏற் படும் இது சில சமயம் பெண் உறுப்பின் வழியாக அதிக மாகக் கொட்டுவதும் உண்டு. இந்நிலை ஏற்பட்டால் தாமத மின்றி மருத்துவரை நாடிச் சிகிச்சை பெறவேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/204&oldid=1285177" இலிருந்து மீள்விக்கப்பட்டது