பக்கம்:இல்லற நெறி.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

இல்லற நெறி


ஒருவர் பின் ஒருவராக இரண்டு பெண்ணை மணந்தான். ஒருத்திக்கு இாட்டைக் குழவிகளும், மற்ருெருத்திக்கு மூன்று பிள்ளைகளுமாகப் பிறந்தனர்; மொத்தத்தில் அவன் எண்பத்தேழு குழவிகட்குத் தந்தையாக இருந்தான். இவன் பிள்ளைப்பேற்றில் நம் நாட்டுப் புராணக் குசேலரையும் தோற்கடித்துவிட்டான்! இதனுல் ஆண்களிடம் பல்பிற வியையுண்டாக்கும் பண்பு உள்ளது என்பது தெளிவாகின் றது. மரபு வழிக் கூறினைத் தவிர, முப்பத்தைந்து வயதி விருந்து நாற்பது வயதுவரை உள்ள பெண்களிடமே பெரும் பாலும் இரட்டைக் குழவிகள் அதிகமாகப் பிறக்கின்றன என்றும், அதுவும் தென்புல நாடுகளைவிட வடபுல நாடு களில்தாம் இப்பிறவிகள் அதிகம் தோன்றுகின்றன என்றும் அறிகின்ருேம்.

இரட்டைக் குழவிகளின் இருப்பை அறிதல்: இன்னொரு முக்கிய செய்தியையும் ஈண்டு நீ அறிதல் வேண்டும் கருப்ப காலத் தொடக்கத்தில் இரட்டைக் குழவிகளின் இருப்பை அறுதியிடுதல் முடியாது. கருப்பகாலத்தின் பின் மாதங் களில், வயிறு அதிகமாகப் பருத்திருக்கும்பொழுது, இரண்டு உடல்களின் சாயல்கள் வயிற்றின் மீது தென்படலாம்; இத ல்ை ஒன்றுக்கு மேற்பட்ட இளஞ்சூல்கள் வயிற்றிலிருக்க வேண்டும் என்பதை அறுதியிட முடிகின்றது. சோதனையின் மூலம் இரண்டு இதயங்களின் துடிப்பையும் அறியலாம்: ஒரி டத்தில் நிமிடத்திற்கு 120 தடவைகள் வீதமும், பிறிதோரி டத்தில் நிமிடத்திற்கு 140 தடவைகள் வீதமும் மருத்துவர் கேட்பதிலிருந்து இரண்டு இளஞ்சூல்கள் இருப்பது உறுதியா கின்றது. புதிர்க்கதிர்களின் மூலமாகவும் இதனை அறுதியிட லாம்;

குழந்தையின் பாலை அறுதியிடல்: பிறக்கும் முன்பு ஒரு குழந்தையின் பாலே அறுதியிட முடியுமா என்று வினவியிருந் தாய், சாதாரண மக்கள் பலவிதமாகக் கூறினலும் மருத் துவமுறைப்படி இதுகாறும் யாதொரு முறையும் கண்டறி யப் பெற்றதாகத் தெரியவில்லை, பெண்ணிடமுள்ள இளஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/244&oldid=1285197" இலிருந்து மீள்விக்கப்பட்டது