பக்கம்:இல்லற நெறி.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் £39

சூலின் துடிப்பு நிமிடத்திற்கு 125க்குக் கீழ் இருந்தால் ஆண் என்றும், அது 145 க்கு மேலிருந்தால் அது பெண் என்றும் ஒரு விதமாகக் கூறுகின்றனர். இளஞ்சூலின் துடிப்புகளே பல்வேறு நிலைகளில் இருப்பதால், இந்த முறை நம்பத்தக்க தாக இல்லை. இக்காலத்தில் இத்துறையில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கருப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஏற்பட்டால், சிதைவடைந்த கருவினை மேம்போக்காகப் பார்த்து அஃது ஆணு அல்லது பெண்ணு என்று சொல்ல முடிவதில்லை; மூன்ருவது மாதத் திற்குப் பின்னர்தான் புறப்பிறப்புறுப்புகள் தெளிவாக அமைகின்றன; இப்பொழுதுதான் அக்குழந்தையின் பாலின அறுதியிட முடிகின்றது.

முன்ஞெரு கடிதத்தில் பிறக்கப்போகும் குழந்தை ஆளு அல்லது பெண்ணு என்று அறுதியிடும் ஆற்றல் தந்தை யிடமே அமைந்துள்ளது என்று கூறினேன் அல்லவா? அதை ஈண்டு நினைவு கூர்க. ஒர் ஆணிடம் உள்ள விந்தனுக் களில் ஆணை உண்டாக்கும் விந்தணுக்களும் பெண்ணை உண்டாக்கும் விந்தனுக்களும் சம எண்ணிக்கையில் உற். பத்தியாகின்றன. பெண்ணிடம் உண்டாகும் முட்டை யணுக்கள் யாவும் ஒரே தன்மையுடையவை. அம் முட்டை ஆணினே உண்டாக்கும் விந்தணுவுடன் சேர நேர்ந்தால் ஆண் குழவியும் பெண்ணினே உண்டாக்கும் விந்தனுவுடன் சேர்ந்தால் பெண் குழவியும் பிறக்கின்றன. ஒரு காலத்தில் குழந்தை ஆணு அல்லது பெண்ணு என்பதை அறுதியிடும் தன்மை முட்டையினிடமே அமைந்து கிடந்தது என்று நம்பி வந்தனர். வலப்பக்கமுள்ள சூற்பையின் முட்டை யணுக்கள் ஆண் குழவிகளை உண்டாக்கும் என்றும், இடப் பக்கமுள்ள சூற்பையின் முட்டையணுக்கள் பெண் குழவி களைப் பிறப்பிக்கும் என்றும் கருதினர். இந்தக் கொள்கை தவறு என்பது மெய்ப்பிக்கப் பெற்றுவிட்டது. ஒருபக்க குற்டையை அகற்றப்பெற்ற பெண்களிடம் ஆண் குழவி களும் பெண் குழவிகளும் பிறந்துள்ளன; விட்ரிட்ஜ் வில்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/245&oldid=598078" இலிருந்து மீள்விக்கப்பட்டது