பக்கம்:இல்லற நெறி.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்பாடு 249

அது கிடக்க. ஒரே வீட்டில் கணவனும் மனைவியும் உடலுறவு கொள்ளாமல் பல நாட்களிருப்பது-திருநீலகண்டநாயஞரின் வாழ்க்கையைப் போன்ற வாழ்க்கை நடத்துவது-இயலாத காரியம், சிறந்த மன அடக்கம் உள்ளவர்களே இம்முறையை மேற்கொள்ளுதல் கூடும்; காம உந்தல் குறைந்தவர்களுக் கும் இம்முறை சாத்தியப்படலமா. ஆனல் நீண்ட நாட்கள் கண்வனும் மனைவியும் உடலுறவு கொள்ளாதிருத்தல் உட லியலடிப்படையிலும் உளவியலடிப்படையிலும் விருப்பத் தக்கதுமன்று. அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்த உடலுறவு மிகவும் இன்றியமையாதது. கருத்தடை முறை களை மேற்கொண்டால்தான் இத்தகைய உறவினை நன் முறையில் அமைத்துக்கொண்டு தேவையற்ற பிள்ளைப் பேற் றினைத் தவிர்க்கலாம்.

நாட்டு முன்னேற்றம்: குழந்தைகட்குப் பெற்ருேர்செய்ய வேண்டிய கடமைகளை மேலே கூறினேன். நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு பெற்ருேருற் தம் கடமைகளையுணர்ந்து குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொண்டால் நாடு முன் னேற்றமடையும் என்பது அரசினரின் கருத்து அவர்கள் தரும் புள்ளிவிவரங்களைக் கவனித்தால் திட்டமிட்ட குடும் பத்தின் அவசியம் நன்கு புலனுகும். நம் நாட்டில் பிறப்பு விகிதம் அதிகமாகவும் இறப்புவிகிதம்குறைந்தும் காணப்படு கின்றன. இரண்டு விகிதத்திற்கும் இடையேயுள்ள எண் ணிைக்கையின் அளவும் பல்கிப் பெருக்கிக்கொண்டே போவ தால் மக்கள் தொகையிலும் அதிகப் பெருக்கம் காணப்படு கின்றது. இப்பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் வெளிப் படை நம் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 150இலட் சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில் ஏற்கெனவே மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற வர்களுக்குப் பிறந்த குழந்தைகள் 60இலட்சம். இதேசமயத் தில் எல்லா வயதையும் சேர்ந்தவர்கள் சுமார் 100இலட்சம் பேர்கள் ஒவ்வோராண்டும் இறக்கின்றனர். அவர்களுள்

4. §uil-uolil- (50tbulb-Planned far, ily

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/255&oldid=598101" இலிருந்து மீள்விக்கப்பட்டது