பக்கம்:இல்லற நெறி.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

இல்லற நெறி


களின் கருவுறச் செய்யும் திறன் வாழ்க்கையின் நடுப்பகு திக்குமேல் குறைந்துகொண்டு போகின்றது.

சருத்தடை முறைகளைக் கையாளாவிடில் முதல் இணை விழைச்சிேைலயே கருவுறல் நடைபெறுதல் வேண்டும். ஆளுல், சிலரிடம் நன்ருகப் பாலுறவு ஏற்பட்ட பல மாதங் கள் கழிந்த பின்னரும் கருப்பச் சின்னமே தோன்றுவதில்லை; இன்னும் சிலரிடம் பல யாண்டுகட்குப் பின்னரும் குழந்தைப் பேறு ஏற்படுவதில்லை. ஆகவே, எவர் ஒருவரும் எப்பொழுது திருமணம் குழந்தைப் பேறின்றிக் கழிந்தது என்பதை உறுதி யாக அறுதியிடுதல் இயலாது. திருமணம் முடிந்து மூன்றுண் டுகள் நிறைவு பெறும்வரை அங்ங்னம் கருதுதல் கூடாது என்பது சிலருடைய கருத்து. எனினும், அங்ங்ணம் மூன் ருண்டுவரை மருத்துவச் சோதனையின்றிக் காலத் தாழ்த்து தல் அறிவுடைமை அன்று. ஓராண்டு முடிவதற்குள் குழந் தைப் பேறு ஏற்படாவிட்டால் உடனே கணவனும் மனேவி யும் விரிவான மருத்துவச் சோதனைக்கு உட்படுவது நல்லது. ஆறு திங்கள் கழிந்த பின்னரே ஒரு சில சோதனைகளே மேற் கொள்வது அறிவுடைமையாகும். அறிவியல் நன்கு வளர்ச்சி பெற்ற இக்காலத்தில் எதனையும் உடனுக்குடன் ஆராய்ந்து முடிவுகாண முயல்வது மிகவும் விரும்பத்தக்கது.

குழந்தைப் பேறு ஏற்படாததற்குக் காரணம் : ஒரு தம்பதி கட்குக் குழந்தைப்பேறு ஏற்படாததற்குக் காரணம் என்ன வாக இருத்தல்கூடும் என்பதை நீ அறிந்துகொள்ள விரும்பு வாய் என்று கருதுகின்றேன்: இவ்விடத்தில் இனப்பெருக்கச் செயலின் முக்கியமான படிகளைப்பற்றிச் சுருக்கமாகக் கூறு வது முற்றிலும் பொருந்தும்,

முதலாவதாக: கருப்பம் ஏற்படுவதற்குப் பெண்ணின் பிறப்பு வழியில் கருப்பையின் வாயிலருகில் அல்லது கருப்பை வாயிலில் தேவையான அளவு நல்ல விந்தணுக்கள் செலுத் தப் பெறுதல் வேண்டும்: இரண்டாவதாக: கருப்பையின் வாயில், கருப்பை, கருக்குழல்கள் இவற்றிலுள்ள வழிகள் வித்தனுக்கள் ஏறிச் செல்வதற்கேற்றவாறு சரியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/310&oldid=1285228" இலிருந்து மீள்விக்கப்பட்டது