பக்கம்:இல்லற நெறி.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பேறு &f of

பொறுத்தது. இக் குறை குறைவான ஊட்டம் காரண மாகவோ, அன்றிச் சுரப்பிகளிலுள்ள தொந்தரவுகளாலோ, அன்றி ஏதாவது தொற்றுக்களின் காரணமாகவோ நேரிட் டிருப்பின், தக்க விட்டமின் சத்துக்களாலும், பொருத்த மான ஹார்மோன்களாலும், வேறு மருந்து கொடுத்தலா லும் பெரிய நன்மையை எதிர்பார்க்கலாம். ஆல்ை, விரைகள் செயற்படுவது கடுமையாகப் பாதிக்கப்பெற்றிருந்தால் அதற்கு இன்றுவரை கழுவாய் யாதொன்றும் கண்டறியப் பெறவில்லை. இத்துறையில் ஏற்பட்ட ஆராய்ச்சியறிவு போதுமானதாக இல்லையாதலின், மேற்கொள்ளப்பெறும் சிகிச்சையும் மனநிறைவு கொள்ளக்கூடியதாக இல்லை. சில சமயம் தம்பதிகளின் வாழ்க்கைக் கோலத்தில் ஏற்படும் மாற் றங்களால், யாதொரு பிரத்தியேகமான சிகிச்சையுமின்றி விந்துவில் குறிப்பிடத்தக்க அளவு மேம்பாடு ஏற்பட்டுவிடு கின்றது. மருத்துவச் சோதனைகளால் இவ்வுண்மை அறியக் கிடக்கின்றது. குழந்தைப்பேறில்லா ஒரு சிலதம்பதிகள் ஒரு சில மாதங்கள் தலயாத்திரையை மேற்கொள்ளுங்கால் அவர் களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்தாம் அவர்கட் குக் குழந்தைப்பேற்றினை விளைவிக்கின்றனவோ என்று அறி வியல் அடிப்படையில் ஊகிக்கவும் இடமுள்ளதல்லவா? பண்டையோர் சமய அடிப்படையிலும் பிற அடிப்படைகளி லும் அமைத்த பல திட்டங்களையும் முறைகளையும் எண்ணுந் தோறும் பல அறிவியலுண்மைகள் புலனுகின்றன; நம் உள் ளத்திலும் ஒரளவு தெளிவு பிறக்கின்றது.

பெண் மலடு : இனி, பெண் மலடுபற்றி ஒரு சில செய்தி களைக் கூற விரும்புகின்றேன். முட்டை பக்கு வமடைதலில் தவறுதல், பிறப்புறுப்புப்பாதையில், குறிப்பாகக் கருப்பை யின் வாயிலும் கருக்குழல்களிலும் தடையிருத்தல், சருப்பை இடம் பெயர்ந்திருத்தல், கருப்பையிலும் அதன் அனைச் சவ்விலும் ஏற்படும் வளர்ச்சியில் நேரிடும் தொந்தரவுகள்ஆகியவை பெண் மலடு ஏற்படுவதற்கு முக்கியகூறுகளாகும். இறுதியில் குறிப்பிட்ட காரணம் கருவுற்ற முட்டை தன்னைப் பதித்துக் கொண்டு வளர்வதற்குத் தடையாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/321&oldid=598251" இலிருந்து மீள்விக்கப்பட்டது