பக்கம்:இல்லற நெறி.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பேறு 荔器岳

யின் முட்டைகளை ஊசியினல் துளையிட்டே கருவுறத் தூண்டலாம் என்பது கண்டறியப்பெற்றது. இங்ஙனம் அவர் ஆறு தவளைகளை உண்டாக்கினர். இக் கன்னிப்பிற வித் தவளைகளுக்கும் சாதாரண முறையில் விந்தனுக்க களால் கருவுற்று உண்டாகும் தவளைகட்கும் யாதொரு வேறுபாடும் இல்லாதிருந்தது. ஆளுல் கன்னிப் பிறவித் தவளைகள் யாவும் ஆண்களாகவே இருந்தன.

மேற்கூறப்பெற்ற சோதனையால் ஓர் உண்மை பெறப் படுகின்றது. கீழ்நிலை உயிர்களிடம் உண்டாகும் முட்டை களில் புதிய உயிரிகளாக வளரும் ஆற்றல்கள் யாவும் முட்டையிலேயே அமைந்து கிடக்கின்றன: முட்டை ஒரு பந்தாகச் சுருட்டி மூடப்பெற்ற பொறிநுட்பம்போல் உன் வது. தக்க தூண்டலால் எப்பொழுது வேண்டுமாயினும் அஃது அவிழக்கூடிய நிலையில் உள்ளது. விந்தனுக்களோ அன்றி பெளதிக-வேதியியற் பொருள்களோ இத்துண்டல விளைவிக்கின்றன. அண்மைக் காலத்தில் பாஸ்டன் மருத்துவ மனையில் ஒாக் என்பாரும் அவருடன் பணியாற்றிய அறிஞர் களும் மிகக் கவர்ச்சிகரமான சோதனை யொன்றினை மேற் கொண்டனர். அறுவை முறை சிகிச்சையின்பொழுது அவர்கள் மானிட முட்டைகளைப் பெற்று அவற்றை மானிட விந்தனுக்களைக்கொண்டு உடலின் புறத்தே கருவுறச் செய் தனர். இதுதான் முதன்முதலாக மானிட முட்டையில் மேற் கொள்ளப்பெற்ற சோதனை யாகும், மூன்று முட்டைகள் மட்டிலும் கருவுற்றுப் பல அணுக்களாகப் பிரியத் தொடங் கின. ஆனல், அவை அதற்குமேல் வளர்ச்சி பெறவில்லை.

Guis'yı epir arapğu Back to Methuselah ar°p 5re8° ஒரு பெண்ணின் உடலுக்குப் புறத்தே ஒரு குழந்தை ஒரு முட்டையினின்றும் அடைகாக்கப்பெற்ற ஒரு கற்பனை நிகழ்ச்சி யொன்றினைக் காண்கின்ருேம். இதற்கு முன்னரே ஒர்ப்படியாள் குந்தி தேவிக்குக் குழந்தைகள் பிறந்துவிட்ட னவே என்ற பொருமைப்பட்ட கருவுற்றிருந்த காந்தாரிக்

3 & T.sirt-sù–Stimulus.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/341&oldid=598293" இலிருந்து மீள்விக்கப்பட்டது