பக்கம்:இல்லற நெறி.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

இல்லற நெறி


வீதமே உள்ளது. இவ்வாறு பிறத்தலுக்குரிய காரணங்கள் இன்னும் தெளிவாக அறியப்பெறவில்லை. எனினும், இது நேரிடாதிருப்பதற்கும் அதனைத் தடுப்பதற்கும் உரிய முறை களே இன்று மருத்துவ அறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர். கருச் சிதைவு: இனி, கருச்சிதைவுபற்றிய ஒரு சில கருத்துகளைக் கூறுவேன். தாயின் உயிரைக் காப்பாற்று வதற்காகவே சிலரிடம் இதனை நாமாகவே மேற்கொள்ளு கின்ருேம். சில சமயம் ஏற்கெனவே பெண்களிடமுள்ள இதய நோய், சிறு நீரக நோய், நுரையீரல் நோய் போன்ற ஆபத்தான நோய்களின் காரணமாகக் கருப்பம் கிக்கலான நிலைமைகளை விளைவிக்கலாம்: இம் மாதிரியான சந்தர்ப்பங் களில் மருத்துவரின் துணைக்கொண்டு கருச்சிதைவு செய்தல் மிகவும் அவசியமாகின்றது: இக் காரணம்பற்றி மேற் கொள்ளப்பெறும் கருச்சிதைவு நோய் தீர்க்கும் கார ணம் பற்றிய தாகும். சட்டப்படி அவசியமான மருத்துவ முறையின் காரணமாக நாம் இதனை மேற்கொள்ளலாம். இவ்வாறு செய்வதை ஒருவரும் குற்றமாகக் கருதமாம் t—rrtfssið:

நடைமுறையிலுள்ள கருச் சிதைவுகள்: எனினும், இன்று பெரும்பான்மையான கருச்சிதைவுகள் வேறு காரணங்களுக் காகவே மேற்கொள்ளப்பெறுகின்றன. இனமேம்பாட்டி யலின் அடிப்படையிலும், சமூகவியலின் அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் இன்று ஒரு பென் கருச் சிதைவினை மேற்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக திரு மணம் ஆகாத ஒரு பென் கருவுற்ருல், தனக்குக் குழந்தைப் பேறு ஏற்பட்டால் அது துடைக்க முடிையாத பழியாக அமைந்து தனக்கும் தன்னுடிைய குழந்தைக்கும் கேடு பயக் கும் என்று கருதலாம்! ஏற்கெனவே பல குழவிகளைப் பெற் றெடுத்த தாய் மேலும் ஒரு பிள்ளை பெறுவதற்கு அச்சப்படி லாம்; அல்லது விரும்பாதிருக்கலாம்; கணவனைத் துறந்த பென்னும், கணவனை இழந்த கைம்பெண்ணும் தனக்கு ஏற் பட்ட கருப்பத்தை எப்படியும் அழிக்கவே கருதுவார்கள்

73. நிேசப்தரிக்கும் இE - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/348&oldid=1285247" இலிருந்து மீள்விக்கப்பட்டது