பக்கம்:இல்லற நெறி.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

இல்லற நெறி


கருச்சிதைவின அனுமதிக்கவும் அல்லது அதனை மறுக்கவும் அக்கழகங்கள் அதிகாரம் பெற்றுள்ளன.

கருச்சிதைவுப்பிரச்சினை மருத்துவக் காரண பற்றி மட்டிலும் மேற்கொள்ளக்கூடிய தொன் றன்று. அது சமூக, ஒழுக்க, நீதிபத்றிய, சமயம்பற்றிய பல்வேறு கருத்து களுடன் பிணேந்துள்ளது. ஆகவே, கருச்சிதைவினக் குறித் துச் சமூத, அறநிலைபற்றிய கருத்துகள் யாவும் மக்களிடம் நன்கு உணர்த்தப்பெறல் வேண்டும். தற்காலத்திலுள்ள தடையுத் தாவுகள் யாவும் நடைமுறையில் சிறிதளவும் பயன்படுவதில்லை.

எனவே, கருச்சிதைவினைக் கீழ்க்கண்டி முறைகளால் பெண்களிடம் நிகழாமல் தடுக்க வேண்டியது மிகவும் இன்றி யமையாதது.

(I) போதுமான அளவு சமூக, பொருளாதார, மருத்துவ மானியங்களை வழங்கித் திட்டமிட்ட கருப்பங்களே மட்டிலும் மேற்கொள்ளப் பிரசாரம் செய்ய வேண்டும்.

(2) ஸ்வீடன் நாட்டிலுள்ள முறை போன்ற ஒரு முறையை நம் நாட்டிலும் ஏற்படுத்தி மக்களிடையே கருச்சிதை வினுல் நேரிடும் கொடுமைகளையும் ஆபத்துகளையும் நன்கு எடுத்துரைக்க வேண்டும். மருத்துவக் காரணம் அல்லாத சமூக, இனமேம்பாட்டியல் பற்றிய காரணங் களுக்காகவும் கருச்சிதைவு செய்துகொள்வதற்கு வசதி யளித்து அதனைத் தக்க மருத்துவக் கண்காணிப்பில் நிகழுமாறு செய்தல் வேண்டும்.

(3) கருச்சிதைவினத் தக்க முறையில்கட்டுப்படுத்தவேண்டு மாயின், கருத்தடை முறைகள் மக்களிடையே நன்கு பரவ வழிவகைகளை வகுத்து அவற்றைச் செயற்படுத்த வேண்டும். உண்மையாகவே நாட்டு நலங்கருதும் தொண்டர்களால்தான் இவற்றை வெற்றியுடன் கொண்டு செலுத்த இயலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/354&oldid=1285250" இலிருந்து மீள்விக்கப்பட்டது