பக்கம்:இல்லற நெறி.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக்கல் 353

30

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு, நன்ை. நலன் தெரிவிக்க.

இறுகாறும் எழுதிய கடிதங்களில் பெரும்பாலும் உயிரியல் அடிப்படையிலும் இனபெருக்க அடிப்படையிலும் திருமணத்தில் பாலுறவுபற்றியே குறிப்பிட்டு ஆராய்ந் தேன். இக்கடிதத்திலும் இதனைத் தொடர்ந்து எழுதும் ஒரு சில கடிதங்களிலும் திருமணத்தில் பாலுறவுபற்றிய ஒரு சில கருத்துகளைத் தெரிவிப்பேன். பாலுறவில்உடலியல், உளவி யல், உள்ளக்கிளர்ச்சிபற்றிய கூறுகள் எங்ங்னம் பங்கு பெறு கின்றன என்பதை விளக்குவேன். அண்மைக் காலத்தில் திருமணத்தில் பாலுறவு பெரும் பங்கு பெருகின்றது என் பதை நன்கு அறிந்துள்ளனர். கணவன் மனைவியரிடம் நல் லுறவு-மகிழ்ச்சியான உறவு-ஏற்படுத்துவதற்கு மனநிறை வுள்ள பாலுறவு பெரிதும் இன்றியமையாதது என்று கண்டுள் ணனர். இணக்கமும் விசைத்திறமும் வாய்ந்தபால் பொருத் தப்பாடு தானகவே இன்றியமையாத முறையில் அமைந் துவிடும் என்று சொல்வதற்கில்லை. பாலுறவுபற்றிய இயல் பும் பொறிநுட்பமும் குறித்த நுண்கருத்துகளை நன்கு அறிந்து கொண்டால்தான் இப்பொருத்தப்பாடு நன்கு அமை யும் என்றும், கலவியின் ஒரு சில கலை நுட்பங்களையாவது தம்பதிகள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்றும் பாலு றவுக் கலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பாலுறவின் பங்கு : இன்று புலனின் பத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்பெறுகின்றது. திருமணத்திற்குப்

s. seve*-Coitus. ச. பாலுறவுக்கலை ஆய்வாளர்கள்-Sexualogists,

இ-23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/359&oldid=598331" இலிருந்து மீள்விக்கப்பட்டது