பக்கம்:இல்லற நெறி.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரும்னக்கலை 37

என்பது பெறப்படும்: அதிலும் முக்கியமாக, தடித்தஉறுதி யான கன்னிச் சவ்வினையுடையவர்கள் இதனை அவசியம் செய்து கோள்ளுதல் வேண்டும். மருத்துவமனையில் உணர்வு நீக்க மருந்தினுல் இதனை மிகஎளிதாகச்செய்துகொள்ளலாம். அங்குப் பெரும்பாலும் அதனை வெட்ட வேண்டிா அவசியமே இராது. குருதியொழுக்கு அதிகமாக ஏற்படாத முறையில் செய்து கொள்ளலாம்; இந்த முறையில் பெண்ணுக்கு யாதொரு தீங்கும் ஏற்படுவதில்லை. ஆயினும், இவ்வாறு செய்து கொள்வது தம்பதிகளின் மனப்பான்மை யையும், பரம்பரைப் பழக்கத்திற்கு அவர்கள் மதிப்பு தருவ தையும் பொறுத்தது: தம்பதிகள் நல்ல நம்பிக்கையுடனும் நல்ல மனப்பான்மையுடனும் அவசரமின்றி ஒருவரை யொருவர் அணுகிளுல், பல தடைகளைத் தடுத்துக் கொள்ள வாம்;

தலைமகனின் பொறுமை: ஒரு பென் தலைநாட் புணர்ச்சி யில் இன்பத்தைப் பெற்ருலும் பெறலாம்; பெருமலும் போகலாம். பெரும்பாலான பெண்கள் தொடக்கத்திலி ருந்தே நல்ல பாலுறவு ஏற் சட்டுத் திருப்தியான முறையில் இன்பத்தை அடைகின்றனர். எனினும், ஒரளவு அதிகமான எண்ணிக்கையுள்ள பெண்கள் பாலுறவுகள் நன்கு ஏற்படும் சில நாட்கள் வரையில் பாலுறவுத்தழுவலுக்கேற்றவாறு நன்கு துலங்க முடிவதில்லை; நன்கு இன்பத்தையும் அடைய முடிவதில்லை. காதலுாடாட்டத்தின்பொழுது ஏற்படும் அன்னியோன்ய உறவினல் ஒரு பெண் அதிக இன்பத்தைப் பெற்றிருக்கலாம்; பாலுறவினுல் இன்னும் அதிகமான இன் பத்தைப் பெறலாம் என்று அவள் எதிர்பார்த்தலும் கூடும். ஆளுல் வலியினலோ, அச்சத்தினலோ, உள் தடைகளி ளுலோ அல்லது யோனிக் குழவில் யாதொரு எதிர்வினை யும் ஏற்படாத காரணத்தினலோ பாலுறவு அவளுக்குச் சிறிதும் இன்பத்தை அளிப்பதில்லை; அந்த உறவு, நலக் குறைவினையும் தருதல் கூடும்; அதனல் அவள் பெரும் ஏமாற்றத்தையும் அடையலாம். இதல்ை அவள் மனம்

44; 2-dim shoot--Inhibition,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/377&oldid=598371" இலிருந்து மீள்விக்கப்பட்டது