பக்கம்:இல்லற நெறி.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

### இல்றை தெறி

உகைத்து போக வேன்டிய அவசியம் இல்லை. தான் எதிச் பார்த்த அளவு முதல் உறவு இன்பத்தையளிக்காவிடினும், சில நாட்களில், அல்லது சில வாரங்களில் நல்ல பொருத்தப் பாடு அமைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் அவள் கன வனுடன் தொடர்ந்து உறவு கொள்ளல் வேண்டும். இரு வரும் உண்மையான குறைகளை நன்கு அறிந்து அதற்கேற்பப் பொறுமையாகவும் எச்சரிக்கையாகவும் நடந்து கொன் டால் எல்லாம் சரியாக அமைந்துவிடும்.

இணைவிழைச்சின் நுட்பம்: இவ்விடத்தில் இன்னுெரு செய்தியையும் நீ அறிந்து கொள்ளல் வேண்டும்: பாலுறவு என்பது உடலாலும் உள்ளத்தாலும் ஏற்படும் ஓர் அநுபவ மாகும். அதில் புலனின்பமும் மன உணர்ச்சியும் கலந்து கிடக்கின்றன. எனவே, இணைவிழைச்சு எல்லையற்ற இன்பத் தையளித்தல் வேண்டும் என்று தம்பதிகள் கருதினல், அவர்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்; ஒருவருடைய எதிர்வினைகளைக் இன்னொருவர் தெரிந்து கொள்ள வேண்டும்; தம்முடைய பாலுறவுத் தேவைகளை நன்கு பொருந்துமாறு இணைத்துக் கொள்ளலும் வேண்டும். அஃதாவது தம்முடைய உறவுகளில் "போகக் கலேயை நன்கு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உடற் பண்பு, உள்ளக் கிளர்ச்சிப்பண்பு, கவின்கலைப்பண்பு ஆகிய மூன்றையும் பாலுறவில் இணக்கமாக இனத்துக் கொண்டு பொருத்தப்பாடடைவதே போகக்கலை" என்பது: இன விழைச்சு என்பதை ஒரு கடமையாகவோ, அல்லது திரு மணத்தின் வழக்கமான செயலாகவோ கருதுதல்கூடாது. கணவனும் மனைவியுமாகிய இருவரும் தமக்கு இன்பத்தை அளிக்கும் முறையில் முயன்று பெறும் அநுபவமே இன விழைச்சு ஆகும். இதனை நன்கு உணர்ந்த இறையனர் களவியல் ஆசிரியர்,

45. st$ff«8âw-Reaction 46. *GL dras & E3ED”-* Art of sex.* 47. aasta såvůeusărg-Aesthetie -uality

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/378&oldid=598373" இலிருந்து மீள்விக்கப்பட்டது