பக்கம்:இல்லற நெறி.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக் கலே 喜&显

இருக்கும் பொழுதே அகிங்ணம் தொடுவதால் பயன் உண்டு. பரப்பு ஈரமற்று இருக்கும்பொழுது தகுதிக்கு மிஞ்சிய அமுக்கமும் மட்டுமிஞ்சிய கையாளலும் வெறுப்பான எதிர் வினைகளைத் தருதல்கூடும். ஆனால், நுட்பமான துண்டல் விரைவாக உடல் முழுவதையும் துலங்கச் செய்து புணர்ச் கிக்கு ஆயத்தமான நிலைமையை உண்டாக்கிவிடும்.

மேற்கூறிய முறைகளை ஒவ்வொரு புணர்ச்சியின்பொழு தும் மேற்கொள்ள வேண்டுமா என்று நீ வினவலாம். கூறு வேன்: பெண்ணின் காம உணர்ச்சியையும் அவளது மகிழ்ச்சி யையும் அதிகரிக்கச் செய்து அவளைப் புணர்நிலக்குக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பும்பொழுதெல்லாம் இவற்றுள் யாதேனும் ஒன்றை மேற்கொள்ளலாம். சில சமயம் தாகை அவளுக்கே புணர்ச்சி விருப்பம் இருக்கும் பொழுது இத்துாண்டலே தேவையில்லை; வேறு சில சமயங் களில் இத் தூண்டல் அதிகமாகவும் தேவைப்படலாம். புணர்ச்சிக்குமுன் மேற்கொள்ளப்பெறும் காதலுரடாட்டத் தின் தன்மை, அளவு, முறை, கால அளவு ஆகியவை யாவும் மனைவியின் வேகமாக அல்லது மெதுவாக எதிர்வினைகள் புரி வதையும், விந்துவினைப் பாய்ச்சுவதற்குமுன் கணவன் ஆண் குறியை விறைத்த நிலையில் வைத்துக்கொள்ள முடிகின்ற கால நீட்டத்தையும் பொறுத்திருக்கின்றன. அவை யாவும் தனிப்பட்டோரின் நிலை, நுண்ணறிவு, கூர்ந்துணரும் திறன் ஆகியவையற்றி அமையும். எனினும், மனைவி கணவனுக்குத் தன்னுடைய உடலின் உணர்வுடைய பகுதிகளையும், தனக்கு வேண்டிய துாண்டலின் வகை, அளவு, காலம் முதலியவற் றையும் தெளிவாக எடுத்துக் கூறுவதில் தயக்கம் கூட்ாது.

காமக்கலை நூல்களிலுள்ள வருணனைகளின் உட்கருத்து : சில நூல்களில் காமக்கலையைப் பற்றி மிக விவரமாக வருணிக்கப்பெற்றுள்ளது. அவற்றில் காம இச்சையை எழுப்பும் மணம், பல்வேறுவகைத் தூண்டல்கள், காம இச்சையை உண்டாக்கும் முத்தம், தாக்கில் முத்தமிடல், காமத்தால் கடித்தல், பெண்குறி முத்தம்போன்ற பல்வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/389&oldid=598398" இலிருந்து மீள்விக்கப்பட்டது