பக்கம்:இல்லற நெறி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இல்லற நெறி


நிவர்த்தி செய்து கொள்ளாமல் திருமணம் புரிந்து கொள்ளு தல் மிகப் பெருந்தவறு: இவர்கள் சரியான மருத்துவ யோசனைக்குப் பிறகுதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும். அண்மைக் காலம்வரையில் திருமணத்திற்கு முன்னர்தான் சர்வாங்க சவரம் செய்துகொள்ளும் வழக்கம் இருந்து வந்தது. அச்செயலை நிறைவேற்றும் மயிர் வினைஞர் மருத்துவத்திலும் நிபுணராக இருப்பார். அவர் அச் செயலை நிறைவேற்றி மணமகனின் யோனிப் பொருத்தத்தைப் பற்றி’ப் பெண்வீட்டாருக்குக் குறிப்புகொடுப்பதுவழக்கம்: அதற்கென ஒரு கட்டணம் வழங்கும் வழக்கமும் இருந்து வந்ததாகத் தெரிகின்றது. இதனை முந்தையோர் கன்னிர் (கன்னி நீர்) ஆடுதல்’ என்றும் வழங்கி வந்ததாகத் தெரி கின்றது. இன்னும் நம் நாட்டில் பண்டையோரிடமும் ஆட வனின் ஆண்மையைக் குறித்துச் சோதனை செய்யும்வழக்கம் இருந்து வந்ததாகவும், இச் சோதனையில் யாதொரு ஐயப் பாடுமின்றி ஆடவனின் ஆண்மை நிலைநிறுத்தப்பெற்ருல் தான் அந்த ஆடவன் திருமணத்திற்கு அருகதையுள்ளவன் என்று முடிவு செய்யும் வழக்கமும்இருந்து வந்ததாக அறியக் கிடக்கின்றது.

கலவிபுரியும் ஆற்றல்: இவ்விடத்தில் நின் மனத்தில் இயல்பாகவே ஒர் ஐயம்,எழலாம். ஒருவருக்குஇணைவிழைச்சு புரிந்த அநுபவமே இல்லாதிருந்தால், அவருக்குக் கலவி புரியும் ஆற்றல் உள்ளதா, இல்லையா என்பதை யாங்ங்ணம் அறிதல் கூடும் என்று நீ வினவலாம். இதனை நேரல்முறை யினுல்தான் அறிதல் கூடும். சாதாரணமாக ஒவ்வொரு வரும் நடைமுறையில் இணைவிழைச்சு அநுபவம் இல்லா திருந்தாலும் பாலுறவுபற்றி ஏதாவது ஒருவித அநுபவத் தைப் பெற்றே இருப்பர். ஆனே ஆணேறு தழுவுதல், நாய்ப்புணர்ச்சி, குரங்குப்புணர்ச்சி போன்ற விலங்குப் புணர்ச்சிகளைக் காணுங்காலும், கோழிப்புணர்ச்சி, புருப்

30. 3¡51Tái) qp60p—Indirect means;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/40&oldid=1285095" இலிருந்து மீள்விக்கப்பட்டது