பக்கம்:இல்லற நெறி.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422

இல்லற நெறி


36

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு

நலன். நலனே விழைகின்றேன்:

இணைவிழைச்சில் வலி: இணைவிழைச்சின் பொழுது சில ருக்கு வலியுண்டாவதற்குக் காரணம் என்ன என்று வினவி யிருந்தாய். அது பால்பற்றிய சங்கடங்களால் நிகழலாம்: ஆல்ை, கன்னிச் சவ்வு விரிவதனுல் ஏற்படும் வலி தற்காலிக மானதே என்பதை நீ அறிதல் வேண்டும்; ஒரு வார காலத் திற்குள் இத்தகைய தொந்தரவு நீங்கிவிடுதல் வேண்டும். புணர்ச்சியின்பொழுது ஏற்படும் வலிக்கு வேறு முக்கியக் காரணங்களும் உள்ளன. இயல்பிகந்த உடற்கூறு அமைப்பு கள் பாலுறுப்புக்களின் வெளிப்புற அல்லது உட்புற வீக் கங்கள், அருவருப்பான முறைகளில் புணர்வதால் உண்டா கும் எரிச்சல் போன்ற கூறுகள் ஆகியவையும் பிறவும் இத் தகைய வலிக்குக் காரணங்களாகலாம். இத்தகைய சங்க டம் மிகத் தீவிரமாக இருப்பின், புண்ாச்சி மனைவிக்கு மகிழ்ச்சியே அளிக்காது: அதை அவள் முற்றிலும்வெறுக்கக் கூடிய நிலையையும் அடைதல் கூடும்

எடுத்துக்காட்டு ஒன்று தருகின்றேன். ஒரு பெண்ணுக் குத் திருமணம் அண்மையில் தான் நடைபெற்றது. புணர்ச்சி யில் ஈடுபடும் பொழுதெல்லாம் அவள் வலியில்ை தொல்லைப் பட்டாள்; கன்னிச் சவ்வு நன்கு விரிந்த பல நாட்களுக்குப் பிறகும் வலி தொடர்ந்து இருந்து வந்தது. நாளடைவில் அது மிகக் கடுமையாயிற்று. இறுதியில் அவளுக்குப் புணர்ச் சியில் இன்பமே ஏற்படவில்லை; அதனல் கணவனுக்கும் அத் தகைய நிலை ஏற்பட்ட்து. ஆகவே, அவர்கள் இணைவிழைச் சினையே கைவிட்டனர். அவர்கள் தங்களுக்குள் பால் பொருத் தமில்லை என்றும், பாலுறுப்புகளின் அளவு வேறுபாடுகளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/428&oldid=1285283" இலிருந்து மீள்விக்கப்பட்டது