பக்கம்:இல்லற நெறி.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் 445

ஏற்றுக்கொள்வதற்கு ஒப்புக்கொள்ளும்வரை திருமணத்தில் ஈடுபடுதல் கூடாது இன்று மேற்புல நாடுகளில் வயது முதிர்ந்த ஆடவர்களும் பெண்களும் பால்கூறினையே கணக் கிற்கு எடுத்துக்கொள்ளாமல் நட்பிற்காகவும், இல்லம்’ என்று ஒன்று ஏற்படுத்துவதற்காகவும் திருமணம் செய்து கொள்ளும் நிலை வேறு; மேற்குறிப்பிட்ட நிேைவறு. இரண் டையும் வைத்து குழப்பிக் கொள்ளுதல் கூடாது. திருமணத் திற்கு முன்னர் தாம் பாலுறவுகொள்ள விரும்பினல் ஏற் படக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் தம்பதிகள் நன்கு புரிந்துகொண்ட பிறகுதான் திருமணத்தில் இறங்க வேண் டும் என்பதை மிகவும் வற்புறுத்த விரும்புகின்றேன்.

விரைவாக விந்து வெளிப்படுதல்: இணைவிழைச்சு புரியும் கால அளவில் பல வேறுபாடுகள் உள்ளன என்பதை ஏற் கனவே உனக்கு விளக்கியுள்ளேன் அல்லவா? விந்துவை வெளிப்படுத்தாது நிலைநிறுத்தும் திறன் மனிதருக்கு மனிதர் வேறுபடுகின்றது என்பதையும் நீ அறிதல் வேண்டும். யோகத்தினுலும் பிற சாதனங்களாலும் விந்துவினை அடக் கும் முறைகளைப்பற்றிக் கேள்வியுறுகின்ருேம் அல்லவா? சாதாரணமாக விறைத்த நிலையைப் பல நிமிடங்கள் நிலை நிறுத்தவேண்டும். ஆண்குறியை பெண்குறியில் நுழைத்த ஒன்று அல்லது இரண்டுநிமிடங்கள் வரையிலாவது-குறைந் தது பத்து, இருபது அல்லது அதற்கு மேற்பட்ட புணர்ச்சி இயக்கங்களை மேற்கொள்ளும்வரையிலாவது-விந்துவெளிப் படாதிருத்தல் வேண்டும். எனினும், சிலரால் இந்தக் காலம் வரைகூட விறைத்த நிலையை நிலைநிறுத்த முடிவதில்லை. அவர்கள் உச்சநிலை உணர்ச்சியை விரைவில் அடைந்துவிடு கின்றனர். இத்தகைய குலைவினல் தொல்லைப்படுகின்றவர் களிடம் ஆண்குறி பெண்குறியில் நுழைந்தவுடன் விந்து வெளிப்பட்டு விடுகின்றது. இன்னும் சிலரிடம் ஆண்குறி பெண் பிறப்புறுப்புகளைத் தொட்டவுடன் விந்து வெளிப் பட்டுவிடுகின்றது! இவர்களால் குறியை நுழைக்கவும் முடி யாது. சாதாரணமாக புணர்ச்சியை மேற்கொள்ளவும் இவர்

氮一29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/455&oldid=598547" இலிருந்து மீள்விக்கப்பட்டது