பக்கம்:இல்லற நெறி.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடல்நலம் 489

காளை பாலுறவு கொண்டதும் அப்பசு கருவுறுவதிலிருந்து நாம் இதனை அறியலாம். எனவே, கீழான உயிரினங்களிடம் புணர்ச்சி பலனளிக்கும் என்ற நிலையில்தான் அவைகளிடம் இணைதல் நடைபெறுகின்றது. பெரும்பான்மையாக இந்நிலை யைப் பிராணிகளின் வாழ்க்கையில் காணலாம் மானிடக் குரங்குகள் போன்ற உயர்நிலைப் பிராணிகளிடம்: எப் பொழுது வேண்டுமாயினும் புணர்ச்சி நிகழும். ஆல்ை, அவற்றிடமும் பால் விருப்பமும் பால் நடத்தையும் ஒரு மாதத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில்தான் அதிகமாகக் காணப்பெறுகின்றன: முட்பை பக்குவப்படும் காலத்தில் தான் இங்ங்னம்தோன்றுகின்றன என்று அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர்:

மானிடப் பெண்ணிடமும்முட்டைபக்குவப்படும் காலத் திற்கும் காம இச்சை எழும் காலத்திற்கும் உள்ள தொடர்பு தெளிவாக அறியக்கூடியதாக இல்லை. மேலே குறிப்பிட்ட காம இச்சை எழும் இரண்டு காலங்களில் மாதவிடாய் தோன்றுவதற்கு முன்னருள்ள காலம் பெண் கருவுறுவதற் கான காலம் அன்று. முட்டை தோன்றும் காலம் பெண் கருவுறுவதற்குரியகாலமாக இருப்பினும், அவ்வுண்மை இன் னும் ஆராய்ச்சிகளால் உறுதிப்படுத்தப்பெறவில்லை. முட்டை பக்குவப்படுங்கால் பெண்ணிடம் நேரிடும் உள்ளக்கிளர்ச்சிக் குலைவுகளின்றும் அவளிடம் காம இச்சை எழுவதற்கு இயற் கையே துணை செய்கின்றது என்று காரண காரியப் பொருத் தம் காணலாம் அங்ங்னமே, மாதவிடாய் தோன்றுவதற்கு முன்னர் கருப்பையின் அணைச்சவ்வில் குருதி நெருக்கடி ஏற் பட்டு அஃது உப்புவதால் அப்பொழுதும் அவளிடம் ஒரு வகைக் கிளர்ச்சி எழுகின்றது என்றும் கூறுகின்றனர். மேலும், கருவுறுவதற்கு வாய்ப்பில்லாத காலத்தும் பெண் பாலுறவு கொள்வதற்கு விரும்புவதினின்றும் ஒர் உண்மை அறியக்கிடக்கின்றது. அஃதாவது, மனிதர்களைப் பொறுத்த மட்டிலும் பால்நடத்தை இனப்பெருக்கத்தை முன்னிட்டு

22. உயர் உயிரினம்-Pri :e

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/495&oldid=598636" இலிருந்து மீள்விக்கப்பட்டது