பக்கம்:இல்லற நெறி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இல்லற நெறி


அறுதியிட்டுச் சொல்ல இயலாது: இன்று பிற்போக்குள்ள சமூகத்தினரும் தொடக்கத்திலிருந்தே சரியான பொருளா தாரநிலை, சமூகநிலை, சுற்றுப்புறச் சூழ்நிலை முதலியவை அமைந்த காரணத்தால் மிக உயர்ந்த பதவிகளில் அமர்ந்து மிகத் திறமையாகவும் பணியாற்றி வருவதைக் காணலாம்: இவர்களுள் சிலர்முற்போக்குச் சமூகத்தினரைவிடவும் சிறப் புடன் திகழ்வதையும் பார்க்கலாம். எனவே, இக்காலத்தில் இனமேம்பாட்டியலின் அடிப்படையில் செயற்படுவதைவிட எல்லோருக்குமே கல்வி வாய்ப்பு, ஏனைய வாய்ப்புகளை நல் கிளுல் நிறைந்த பலனை எதிர்பார்க்கலாம் என்று கருதியே அரசினரும் எல்லோருக்கும் இயன்றவரை சமம்ானவாய்ப்பு களை நல்குவதில் அதிகமாக அக்கறை காட்டிவருகின்றனர்.

திருமணப் பொருத்தத்தைப்பற்றிய ஆராய்ச்சியில் நீ பல செய்திகளைத் தெரிந்து கொண்டாய், இக்கடிதங்களை உன் வாழ்க்கைத் துணைவியாகவருபவளுக்கும் காட்டி அவளை யும் படிக்கச் செய்க. அவளும் படித்த பெண்தான் என்றும் நீ எழுதியிருந்தாய்: அடுத்து எழுதும் கடிதங்களில் உயிரியல் அடிப்படையில் திருமணத்தைப்பற்றிச் சில கருத்துகளைத் தெரிவிப்பேன்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/78&oldid=1285114" இலிருந்து மீள்விக்கப்பட்டது