பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 99 ஆகவும், “சூருடைக் கானக முகந்த காளி” ஆகவும், "தாருகன் பேருரங் கிழித்தபெண்” ஆகவும் வாயிற் காப்போனுக்குக் காட்சி அளிக்கும் நிலையில் இருக்கின்றார். தகைசால் பூங்கொடியாய், மலரிடைத் தோன்றும் இலக்குமி யாய்க் காட்சியளித்த ஒரு பெருமாட்டி, இத்தகைய கொடுமை நிறைந்த காட்சியை எங்ங்ணம் நல்க முடியும்? நோக்கினால் அவருடைய மனத்தில் நேர்ந்த மாறுபாடு காரணமாகவே இத்தகைய மாற்றம் நிகழ்ந்ததோ என்று ஐயுறவேண்டியுள்ளது. கதிரவனை விளித்ததும், மானிடப் பெண்ணாகிய அவளுக்குச் செங்கதிர்ச் செல்வன் விடை இறுத்ததும் இந்த ஆணவம் வலுப் பெற்று வெளிப்படக் காரணமாயிற்று போலும், எல்லையற்ற துயரத்தின் காரணமாக இதுவரை அமிழ்ந்திருந்த ஆணவமலம் வெளிப்பட்டதனால் இக் கொடுங்காட்சியை நல்கினார் போலும், இனி மட்டார்குழலார் பிறந்த பதிப்பிறந்தேன் பட்டாங்கு யானும் ஒர் பத்தினியே யாமாகில், ஒட்டேன்; அரசோடு ஒழிப்பென் மதுரையும் என்பட்டிமையும் காண்குறுவாய் நீ”(21:35) என்று பேசும் பேச்சும் இக் குற்றம் மீதுTர்ந்து நின்ற நிலையை அறிவுறுத்துகிறதோ என்று நினைக்கவேண்டியிருக்கிறது. மதுரை எரியத் தொடங்குகையில் மாயத்தினியின் சினம் ஒருவாறு தணிந்துவிடக் காண்கிறோம். அன்றியும், தீக் கடவுள் அவர் முன் தோன்றி, மாயத்தினி நின்னை மானப் பிழைத்த நாள், பாய் எரி இந்தப் பதியூட்டப் பண்டே ஓர் ஏவல் உடை யேனால்”(21:50) என்று கூறினவுடன், மதுரைநகரைத்தண்டிக்க