பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே பிறப்பில் விடு எங்கோ இசைத்த சிலம்பின் தலைவியாகிய மாபத் தினி - கண்ணகியைப்பற்றி எத்துணையோ கருத்துகள் பேசப்பெற்று உள்ளன. கற்புக் கடம் பூண்ட அத் தெய்வத்தைப் பற்றிப்பல்வேறு கோணங்களிலிருந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று உள்ளன. எனினும், கண்ணகி பிறக்கும்பொழுதே தெய்வத் தன்மையோடு பிறந்தவரா? அன்றி, ஏனைய மாந்தரைப்போலவே பிறந்து, தம்முடைய உறுதிப்பாடு காரணமாகத் தெய்வத் தன்மையை எய்தியவரா என்பதுபற்றிச் சிந்திப்பதில் தவறு இல்லை என்றே தோன்றுகிறது. - சிலப்பதிகார ஆசிரியர் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர் என்பது பற்றி முதல் கட்டுரையில் பேசப்பட்டுள்ளது. காப்பியத் தலைவனாகிய கோவலன் சமண சமயத்தைச் சேர்ந்தவன் அல்லன் என்பதும் முதல் கட்டுரையில் கூறியுள்ளோம். சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்”(கொலை 18-19 அடிகள்) என்ற அடியைத் தவிர, அந்தக் கருனை மறவனின் சமயம் யாது என்பதை விளக்கும் சான்றுக்ள் இருப்பதாகத் தெரியவில்லை. என்றாலும், இத் தமிழ் நாட்டில் பண்டு தொட்டுப் பயின்று வருவனவாகிய சைவ, வைணவக் கொள்கைகளின் அடிப் படையில் இக் காப்பியத் தலைவியின் வளர்ச்சியை ஆராய்வதில் தவறு ஒன்றுமில்லை.